மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கு மதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் அனில் அம்பானி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தை இந்தியாவில் நிறுவிய திருபாய் அம்பானியின் மகன்கள் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி. இவர்களில் தற்போது முகேஷ் அம்பானி தொழிலில் கொடி கட்டி பறக்கிறார். இவரது சகோதரர் அனில் அம்பானியும் ஒரு காலத்தில் இதே செல்வாக்குடன் இருந்தவர் தான்.

அனில் அம்பானி உலகின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தவர். அவரது சொத்து மதிப்பு 1.83 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. ஒரு வணிக சாம்ராஜ்யத்தையே அவர் நிறுவியிருந்தார். ஆனால் பின்னாளில் அது பெரும் வீழ்ச்சி கண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் அம்பானி திவாலாகி விட்டதாக அறிவித்தார்.
இந்த நிலையில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து மூன்று நாட்களாக பங்குச்சந்தையில் அப்பர் சர்க்யூட் நிலையை எட்டின.
மும்பை பங்குச்சந்தை வெளியிட்டுள்ள தகவலின் படி அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் மார்ச் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகின.
ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரக்சர் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் இருந்த கடன் பிரச்னையை தீர்த்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளன.
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனம் 1995 ஆம் ஆண்டு திருபாய் அம்பானியால் நிறுவப்பட்டது. முதலில் பாவனா பவர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் ரிலையன்ஸ் டெல்லி பவர் லிமிடெட் என்றும், 2004 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் எனர்ஜி ஜெனரேஷன் லிமிடெட் என்றும் பெயர் மாற்றப்பட்டது. இறுதியாக 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பவர் லிமிடெட் என மாற்றப்பட்டது.
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு ஒரே நிமிடத்தில் முழுவதுமாக சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் 2008 ஆம் ஆண்டு ரூ.260 என இருந்த நிலையில் நிறுவனத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து வெறும் ஒரு ரூபாய் என குறைந்தது இந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த நிறுவனத்தின் பங்குகள் 5% என அப்பர் சர்க்யூட்டை எட்டியுள்ளன .
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 8.6% அதிகரித்துள்ளது. மார்ச் 20ஆம் தேதியிலும் இந்த பங்கு ரூ. 23.90 என்ற அப்பர் சர்க்யூட் நிலையை எட்டியது.
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை பொறுத்த வரை 64% சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் புரமோட்டர்களிடம் 24.49 % உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் 8. 37% பங்குகளையும் மற்ற உள்ளூர் நிறுவனங்கள் 2. 95% பங்குகளையும் கொண்டுள்ளன. எனவே அனில் அம்பானி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications