கொரோனா தொற்றுப் பாதிப்புகள் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் தணித்துள்ள காரணத்தால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குப் பணியாற்றிய ஊழியர்கள் இந்திய வர துவங்கியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில் உலகளாவிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தூதரகப் பணியாளர்கள் முழுநேர அலுவலகப் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனால் பெரு நகரங்களில் ஆடம்பர வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
உயர் அதிகாரிகள்
MNC நிர்வாகிகள் மற்றும் தூதரகப் பணியாளர்களின் குடும்பத்தினர் கொரோனா காரணமாக அவர் அவர் சொந்த ஊரில் இருந்த நிலையில் தற்போது இந்தியாவிற்குத் திரும்பியுள்ளனர். இதனால் ஆடம்பர வீடுகள், பென்ட்ஹவுஸ் அல்லது பண்ணை வீடுகளுக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
வாடகை வீடு
கொரோனா காலத்தில் வாடகை வீட்டில் இருந்து மாத மாதம் வாடகை வந்தாலே பெரிய விஷயமா இருந்த நிலையில் தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ளதால் நாட்டில் சில பகுதிகளில் ஆடம்பர வீடுகளுக்கான வாடகை 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
மும்பை டூ சென்னை
நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் மேற்கு புறநகர் மற்றும் மத்திய மற்றும் தெற்கு மும்பை பகுதிகள், என்சிஆர் பகுதியில் கோல்ஃப் கோர்ஸ் சாலை மற்றும் தெற்கு டெல்லி; பெங்களூரில் ஜே.பி.நகர், ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் காலியாக இருக்கும் வீடுகளே இல்லாத நிலை மட்டும் அல்லாமல் சராசரி மாத வாடகை பெரிய அளவில் அதிகரித்துள்ளன.
60 சதவீதம் உயர்வு
சாவில்ஸ் நிறுவனத்தின் ஆய்வுகள் படி டெல்லியின் தென்-மத்திய பகுதியில் 2022 நிதியாண்டின் முதல் பாதியில் வாடகை அளவு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
பெரும் பணக்காரர்கள்
இந்தியாவில் தற்போது பெரும் பணக்காரர்களில் (HNI) பெரும்பகுதி இப்போது தங்களுடைய சொந்த உபயோகத்திற்காக அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதை விட, வாடகைக்கு விடுவதையே விரும்புகின்றனர். காரணம் அதிகப்படியான வருமானம் என்பதால் மட்டுமே.
ரியல் எஸ்டேட்
2021 துவக்கம் முதல் இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் மற்றும் விற்பனை அதிகளவில் இருந்தது, இதன் வெளிப்பாடு தற்போது தெரிகிறது. முதலீட்டுச் சந்தையில் ஒரு கூட்டம் ரியல் எஸ்டேட் தேவையில்லாத முதலீடு எனக் கூறி வரும் நிலையில் இந்தச் செய்து அதை முற்றிலும் பொய்யாக்கியுள்ளது.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications