நீங்கள் கடினமாக உழைத்தால் எதையும், எல்லாத்தையும் அடைவது சாத்தியம் என்று ஊக்கப்படுத்தும் வகையில் பலர் பேசியிருப்பதை கேட்டு இருப்போம். இயல்பு வாழ்க்கையில் அதனை சாதித்து காட்டிய ஏராளமான மக்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ரேணுகா ஆராத்யா.
கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள கிராமமான கோபசந்திராவில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ரேணுகா ஆராத்யா. அவரது தந்தை ஒரு அர்ச்சகர் மற்றும் குடும்பத்தினருக்கு 3 வேளை உணவு கூட கொடுக்க முடியாதவராக இருந்தார். கடுமையான வறுமைக்கு மத்தியிலும் ரேணுகா ஆராத்யா தட்டு தடுமாறி 10ம் வகுப்பு முடித்தார்.

அவரது தந்தை இறந்த பிறகு அவர் படிப்பை தொடருவது என்பது கானல் நீராகி விட்டது. குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு வீட்டில் உதவியாளராக வேலை செய்தார். அதன் பிறகு அர்ச்சகராக பணியாற்ற தொடங்கினார்.
வீடு வீடாக சென்று அரிசி, மாவு மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்களை உதவியாக கேட்டு வாழ்ந்து வந்தார். இப்படியே சென்றால் பிழைப்பது கடினம் என்பதை உணர்ந்தார். இதனையடுத்து ஒரு காவலாளியாக வேலை செய்தார். இதற்கிடையில் சிறிது நேரம் இயந்திர இயக்கத்தை கற்றுக் கொண்டார். லேத் மெஷின் தொழிற்சாலையில் வேலை பெற்றார். அதன் பிறகு அவர் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை செய்தார்.
20 வயதில் அவருக்கு கல்யாண ஆசை பிறந்தது. திருமணம் செய்தால் கூடுதல் பொறுப்புடன் பணியாற்ற தூண்டும் என்று நம்பினார். பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரியும் போது, சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் வந்தது.
மேலும் சூட்கேஸ் கவர்களை விற்க முடிவு செய்தார். ஆனால் அது அவரை பெரிய பள்ளத்தில் தள்ளியது, ரூ.30,000 நஷ்டம் ஏற்பட்டது. இந்த தோல்வி அவரை மீண்டும் காவலாளி வேலையை செய்யும் நிலைக்கு தள்ளியது. இருப்பினும் தொழிலில் நஷ்டம் அடைந்த பணத்தை அவரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து டிரைவிங் கற்றுக் கொண்டு டிரைவராக மாறி சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்தார்.
அதன்படி, டிரைவிங் கற்றுக்கொண்டு ஒரு டிராவல் ஏஜென்சியில் டிரைவராக சேர்ந்தார். இது அவரது வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஏஜென்சியில் டிரைவராக பணியாற்றிய போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வது வழக்கம்.
அவருக்கு சம்பளத்தை தவிர நல்ல டிப்ஸ் கிடைக்க தொடங்கியது. அந்த நிறுவனத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்த அனுபவம் அவருக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்தது. ஒரு சுற்றுலா ஏஜென்சியை தொடங்க முடிவு செய்தார்.
பிரவாசி கேப்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இதற்காக தனது சொந்த பணத்தை முதலீடு செய்தார் மற்றும் சில வங்கிகளில் உதவியும் (கடன்) பெற்றார். சொந்தமாக தனது முதல் காரை வாங்கினார். வணிகம் நன்றாக சென்றதால் அடுத்த ஆண்டில் மேலும் ஒரு காரை வாங்கினார்.
இதற்கிடையில் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் தனது தொழிலை விற்பனை செய்ய முயற்சிப்பது ரேணுகா ஆராத்யாவுக்கு தெரியவந்தது. உடனே அந்த நிறுவனத்தை ரூ.6 லட்சத்துக்கு அவர் வாங்கினார். அந்த நிறுவனத்தில் அப்போது 32 வண்டிகள் இருந்தன. அவரின் துணிச்சலான இந்த முடிவு அதிர்ஷ்டமாக மாற தொடங்கியது.
அமேசான் இந்தியா நிறுவனம் தனது விளம்பரத்துக்காக இவரது நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது. வால்மார்ட், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கின. படிப்படியாக நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க தொடங்கியது தற்போது ரூ.40 கோடியை தாண்டியது. இன்று இவரது நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications