அரசு சேவைகளைப் பெற லஞ்சம் வழங்கிய வணிக நிறுவனங்கள்.. கடந்த 12 மாதங்களில் 66% அதிகரிப்பு!

இந்தியாவில் அரசு சேவைகளை பெறுவதற்காக பல வியாபாரிகள் லஞ்சம் கொடுத்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. லோக்கல் சர்க்கில்ஸ் நடத்திய கணக்கெடுப்பில் 159 மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் சுமார் 66 சதவீதம் பேர் அரசு சார்ந்த சேவைகளை பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வணிக நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களில் பல்வேறு வகையான அரசு சேவைகளை பெறவும் ஆர்டர்களை பாதுகாக்கவும் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 மாதங்களில் மட்டும் வணிக நிறுவனங்கள் பல்வேறு வகையான அரசு நிறுவனங்களுக்கு சப்ளையர்களாக தகுதி பெறவும், ஆர்டர்களைப் பெறவும், லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர். PTI அறிக்கையின்படி இந்த கணக்கெடுப்பு மே 22-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

 அரசு சேவைகளைப் பெற லஞ்சம் வழங்கிய வணிக நிறுவனங்கள்.. கடந்த 12 மாதங்களில் 66% அதிகரிப்பு!

மொத்தமாக வணிக நிறுவனங்களிடமிருந்து கொடுக்கப்பட்ட லஞ்சத்தில் 75 சதவீதம் அரசாங்க சட்ட அதிகாரிகள், மெட்ராலஜி டிபார்ட்மென்ட் அதிகாரிகள், மருந்து, சுகாதாரம், போன்ற அரசு துறைகளின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல ஜிஎஸ்டி அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், மாநகராட்சி மற்றும் மின்சார துறை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக பலர் புகார் அளித்துள்ளனர்.

இந்த கணக்கெடுப்பிற்காக 18,000-த்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன. 54 சதவீதம் பேர் தாங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக தெரிவித்தனர். அதே நேரம் 46 சதவீதம் பேர் அதிகாரப்பூர்வ செயல்முறையை விரிவுபடுத்துவதற்கு தாமாகவே முன்வந்து லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

அரசாங்க அதிகாரிகளிடமிருந்து செயல்முறையை விரிவுபடுத்துவதற்காக கடந்த 12 மாதங்களில் 66% வணிக நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 16 சதவீதம் பேர் எந்தவித லஞ்சமும் கொடுக்காமல் தங்கள் வேலையை முடித்துள்ளதாகவும், 19 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 மாதங்களில் லஞ்சம் கொடுத்த வணிகங்களில் 54 சதவீதம் பேர் கட்டாயத்தின் அடிப்படையில் இதை செய்துள்ளனர். அதே நேரம் 46 சதவீதம் பேர் சரியான நேரத்தில் செயல்முறையை முடிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர்.

எங்கும் எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்று இந்தியா பயணித்துக் கொண்டிருக்கையில் பல்வேறு அரசாங்க அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஊழல் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கேமராக்கள் இல்லாத இடங்களில் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 12 மாதங்களில் லஞ்சத்திற்காக செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், லஞ்சத்தின் மொத்த மதிப்பும் குறைந்துள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+