இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் (Toll Plaza) காணப்படும் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்தும் விதமாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒரு முன்னோடித் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் பயணிகளை தூய்மை பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில், சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்த புகார்களை அளிப்பவர்களுக்கு ரூ.1,000 வெகுமதி வழங்கப்படும். இந்த ரூ.1,000 புகார் அளிப்பவரின் பாஸ்டேக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 வெகுமதியை பெறுவது எப்படி..?: சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் பயணிகளுக்கு ரூ.1,000 வெகுமதியைப் பெறுவதற்கான செயல்முறை மிகவும் எளிமையானது. முதலில் 'ராஜ்மார்க்யாத்ரா' (Rajmargyatra) என்ற செயலியின் புதிய பதிப்பைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட சுங்கச் சாவடிகளில் உள்ள சுகாதாரமற்ற கழிவறைகளின் தெளிவான புகைப்படத்தை எடுக்க வேண்டும். அதில் நேரம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
பின்ன பயனரின் பெயர், இடம், வாகனப் பதிவு எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை செயலி வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தச் செயல்முறையைப் பின்பற்றிச் சுகாதாரமற்ற கழிவறைகளைப் புகாரளிக்கும் ஒவ்வொரு வாகனப் பதிவு எண் கணக்கிற்கும் ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வெகுமதியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வெகுமதி பணமாக வழங்கப்படாது. மேலும், இதை மற்றவர்களுக்கும் மாற்றிக் கொள்ள முடியாது.
வெகுமதிக்கான விதிகள் : இந்தத் திட்டம் நேர்மையாகவும், திறமையாகவும் நடைபெற வேண்டுமென தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் NHAI ஆல் கட்டப்பட்ட, இயக்கப்படும் அல்லது பராமரிக்கப்படும் கழிவறைகளுக்கு மட்டுமே பொருந்தும். எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், தாபாக்கள் அல்லது பிற பொது வசதிகளில் உள்ள கழிவறைகள் இதில் சேராது.
திட்டம் நடைமுறையில் உள்ள மொத்தக் காலத்திலும், ஒவ்வொரு வாகனப் பதிவு எண்ணுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே வெகுமதி வழங்கப்படும். ஒரே நாளில் பல பயனர்கள் புகாரளித்தாலும், ஒவ்வொரு கழிவறை வசதிக்கும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வெகுமதி வழங்கப்படும்.
ஒரே கழிவறையைப் பல பயனர்கள் ஒரே நாளில் புகாரளித்தால், முதலில் சமர்ப்பிக்கப்பட்ட சரியான புகைப்படம் மட்டுமே வெகுமதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். சமர்ப்பிக்கப்படும் படங்கள் அசல் படங்களாக இருக்க வேண்டும். செயலி வழியாகவே அவை எடுக்கப்பட வேண்டும். மாற்றியமைக்கப்பட்ட, நகல் எடுக்கப்பட்ட அல்லது இதற்கு முன் புகாரளிக்கப்பட்ட படங்கள் நிராகரிக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு : பயனர்கள் சமர்ப்பிக்கும் புகார்களை சரிபார்க்கும் பணியில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்பட உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர், தேவைப்பட்டால் மனிதர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும். இந்த இரண்டு அடுக்கு சோதனை முறை மூலம், வெகுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்பம், மக்கள் பங்கேற்பு மற்றும் பொறுப்பு ஆகியவற்றை இணைக்கும் முதல் முயற்சி இதுவாகும். பயணிகளின் பங்களிப்புடன், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடி வசதிகளின் சுகாதாரத் தரத்தை இந்தத் திட்டம் நிச்சயமாக உயர்த்தும் என்று NHAI நம்புகிறது. எனவே, இதனை வாகன ஓட்டிகள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications