இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை இன்று கொண்டாடி வரும் நிலையில், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடா அரசின் முக்கிய தலைவர் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இன்று காலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவின் படி கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் பேசியதாக அறிவித்தார். இந்த உரையாடல் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நடைபெற்றது. ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் இந்த பேச்சுவார்த்தையை "பயனுள்ள உரையாடல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் கனடா சீனா உடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவித்தார். இதேபோல் சீனா தனது பொருட்களை அமெரிக்காவுக்குள் கொண்டுவர கனடாவை பயன்படுத்த கூடாது என்றும் எச்சரித்தார்.
இந்த நிலையில் இந்தியா - கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் குடியரசு தினத்தில் பேசியது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒருப்பக்கம் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்கிறது, ஐரோப்பா இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்கிறது. இவை இரண்டும் மேற்கத்திய நாடுகள் காலம் காலமாக அமெரிக்காவை நம்பியிருக்கும் நிலையை மாற்றும் முயற்சியாக பொருளாதார சந்தையில் கருத்து நிலவுகிறது.
மேலும் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இரு அமைச்சர்களும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக பொருளாதார கூட்டுறவு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம்.
இதேவேளையில் கனடா நாட்டின் எரிசக்தி அமைச்சர் டிம் ஹாட்சன் ஜனவரி 27 முதல் 30 வரை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கோவாவில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி மாநாட்டில் கலந்துகொள்வதுடன், இந்திய தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்த உள்ளார். இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான எரிசக்தி துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக அமைய உள்ளது.
மேலும் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கிற்கும் ஆஸ்திரேலிய அரசு மற்றும் மக்களுக்கும் ஆஸ்திரேலிய தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications