பெங்களூரு: நாளுக்கு நாள் வங்கிகளில் மோசடி எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் இன்றளவிலும் மோசடிகள் குறைந்தபாடாகவே இல்லை.
அதை நிரூபிக்கும் விதமாகவே அடுத்தடுத்த மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. முன்னதாக பிஎம்சி வங்கியில் நடந்த மோசடிகள் இன்னும் மக்கள் மனதில் மறையாத நிலையில், தற்போது அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா என்ற தனியார் வங்கியின் மேல் வந்த புகாரால் தற்போது அந்த வங்கியின் மீது தடை விதித்துள்ளது ஆர்பிஐ.
ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாராவுக்கு எச்சரிக்கை
மத்திய வங்கி தொடர்ந்து என்ன தான் நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வந்தாலும், மோசடிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இந்த நிலையில் ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு புதியதாக எந்தவொரு டெபாசிட்டுகளையும் பெறக் கூடாது. அதே போல் வாடிக்கையாளர் பெரிய அளவிலான தொகையினை எடுக்கவோ அனுமதிக்க கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
கடன் வழங்க கூடாது.
புதியதாக பணத்தை பெறவும் கூடாது. அதே போல் புதியதாக பணத்தை கொடுக்கவும் கூடாது என்றும் (கடன் கொடுக்க கூடாது) ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஆக மொத்தம் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி எந்தவொரு வங்கி நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை
இந்த நடவடிக்கையானது 1949ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் 35ஏ மற்றும் 56 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் தெரிவித்துள்ளார். என்ன தான் மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் மோசடிகள் இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றன. ஆக இன்னும் மத்திய வங்கி கடினமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பெரிய அளவில் பணம் எடுக்க தடை
ஏற்கனவே பிஎம்சி வங்கியால் அடிவாங்கிய ஆர்பிஐ, தற்போது ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி விஷயத்தில் தற்போது சற்று தெளிவான முடிவை எடுத்துள்ளது. சஹாரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு 35,000 ரூபாய்க்கு கொடுக்க கூடாது என தடை வித்துள்ளது.
நம்பிக்கை இழப்பு
தொடர்ந்து இவ்வாறு அதிகரித்து வரும் பிரச்சனைகளால் மக்கள் வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து வருகின்றனர். அதிலும் தங்களது சொந்த பணம் கையிலிருந்தும் அவசர தேவைக்கு எடுத்து பயன்படுத்த முடியாமல் பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்திருந்த சிலர் தற்கொலை செய்து கொண்டது, சிலர் இதனாலேயே மனம் உடைந்து இறந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆக இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications