100% பாதுகாப்பு.. நிலையான வருமானம்.. ரிசர்வ் வங்கி கொடுக்கும் செம சான்ஸ்..!

பொதுவாக நாம் எல்லாம் சிறுக சிறுக சேகரித்த பணத்தை தங்கம், பங்குகள், வங்கி டெபாசிட் மற்றும் நிலம் ஆகியவற்றில் நாம் அதிகமாக முதலீடு செய்வோம். அரசு பத்திரங்களிலும் நாம் முதலீடு செய்யலாம் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் செலவுகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. அரசு பத்திரங்களை வாங்குவது என்பது நாம் அரசுக்கு கடன் கொடுப்பது போன்றது. குறிப்பிட்ட தேதியில் (முதிர்வு தேதி) அசல் தொகையை நமக்கு அரசு திருப்பி தரும். அதுவரை வழக்கமான இடைவெளிகளில் நமக்கு வட்டி வருவாயை அரசு வழங்கும். இதுதான் அரசு பத்திரங்கள்.

முன்பு, வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசு பத்திரங்களை வாங்கி வர்த்தகம் செய்து வந்தன. தற்போது சில்லரை முதலீட்டாளர்களும் அரசு பத்திரங்களை எளிதாக வாங்கும் வகையில் சில்லரை கடன் பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் தற்போது அரசு பத்திரங்கள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

100% பாதுகாப்பு.. நிலையான வருமானம்.. ரிசர்வ் வங்கி கொடுக்கும் செம சான்ஸ்..!

சிறப்பம்சங்கள்:

  • அரசு பத்திரங்கள் பொதுவாக குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடுகளாக கருதப்படுகிறது. ஏனென்றால் அரசாங்கம் அந்த கடனை கட்டாயம் திருப்பி தந்து விடும்.
  • அரசு பத்திரங்கள் அரசாங்கத்தின் ஆதரவு காரணமாக உயர் மட்ட பாதுகாப்பை வழங்குகின்றன.
  • முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடைவெளியில் நிலையான வட்டி கொடுப்பனவுகளை பெறுவீர்கள். இது கணிக்கக்கூடிய வருமான வரவை குறிக்கிறது.
  • உங்கள் போர்ட்போலியாவில் அரசு பத்திரங்களை சேர்ப்பதன் மூலம், உங்கள் முதலீட்டை பல்வகைப்படுத்தவும் ஒட்டு மொத்த ஆபத்தைக் குறைக்கவும் உதவும்.
  • அரசு பத்திர பரிவர்த்தனைகள் பொதுவாக வெளிப்படையானவை, மேலும் தகவல்களும் உடனடியாக கிடைக்கின்றன.
  • அரசு பத்திரங்கள் குறுகிய காலம் முதல் நீண்டக் கால வரையிலான வெவ்வேறு முதிர்வு காலங்களை கொண்டுள்ளன. உங்கள் முதலீட்டு எல்லையுடன் ஒத்துப்போகும் பத்திரங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

எங்கு வாங்கலாம்?:

தரகு நிறுவனங்களின் பல ஆன்லைன் வர்த்தக தளங்களில் நாம் அரசு பத்திரங்களை வாங்கவும், விற்கவும் முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கி, சில்லரை நேரடி தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது சில்லரை முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களை ஆன்லைனில் நேரடியாக வாங்கவும் விற்கவும் அனுமதிக்கிறது. இது செயல்முறையை எளிதாக்குவதுடன், செலவுகளையும் குறைக்கிறது. சில வங்கிகள் அரசு பத்திரங்களை வாங்குவதற்கும் உதவுகின்றன.

இடர்பாடுகள்:

பத்திர விலைகள் வட்டி விகிதங்களுக்கு நேர்மாறாக ஏற்ற இறக்கமாக இருக்கலாம். வட்டி விகிதம் உயர்ந்தால் பத்திரங்கள் விலை குறையக்கூடும். வட்டி விகிதம் குறைந்தால் பத்திரங்கள் விலை அதிகரிக்கக்கூடும்.
அரசு பத்திரங்கள் பொதுவாக பணப்புழக்கமாக இருந்தாலும், சில பத்திரங்கள் மற்றவற்றை விட குறைந்த வர்த்தக அளவை கொண்டிருக்கலாம். அரசு பத்திரங்களிலிருந்து பெறும் வட்டி வருமானம் வரி விதிப்பு உட்பட்டது. உங்கள் வருமான வரி அடுக்கின் படி வரி விதிக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+