நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தினமும் ஒரு நபராவது மோசடிக்காரர்களின் வலையில் விழுந்து தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை இழக்கின்றனர். அதற்கு சான்றாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 73 வயதான நபர் "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடியில் சிக்கி ரூ.45.5 லட்சத்தை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் எப்படி நடந்தது? மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட யுக்தி என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
சர்மா என்ற 73 வயதான ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு நவம்பர் 12-ஆம் தேதி அன்று ஒரு அழைப்பு வந்துள்ளது. வழக்கம் போல போதைப் பொருள் சர்மாவின் பெயரில் வந்துள்ளதாக மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர் பண மோசடியில் வழக்கில் சிக்கி இருப்பதாகவும் அழைப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். கைது செய்வதை தவிர்க்க மோசடிக்காரர்கள் தாங்கள் சொல்வதற்கு ஒத்துழைக்கும் படி கூறியுள்ளனர்.

வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் சிபிஐ அதிகாரி போல காட்சி அளிக்கும் ஒருவர் போலீஸ் சீருடையில் தோன்றி ஷர்மாவிடம் பேசியுள்ளார். அதோடு வீட்டில் ஒரு தனி அறையில் இருக்கச் சொல்லி டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி ஷர்மாவை மிரட்டியுள்ளனர். தாங்கள் சொல்வதற்கு இணங்க தவறினால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷர்மாவிடம் கூறியுள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்றால் என்ன? தற்போது மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்திகளில் இதுவும் ஒன்று. போதை பொருள் அடங்கிய பார்சல் பாதிக்கப்படும் நபரின் பெயரில் வந்துள்ளதாக கூறி, அவர்களுடைய வீட்டின் அறையிலேயே தனிமையில் இருக்கச் சொல்லி, கைது செய்யப்படாமல் இருக்க வேண்டுமானால் தங்களுடைய வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு மிரட்டி பணம் பறிப்பது தான் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.
இந்த சம்பவத்திலும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. சர்மாவிடம் தங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பும் படி கூறியுள்ளனர். அதற்கினங்க சர்மா கூகுள் பே, பேடிஎம், நெட் பேங்கிங் மற்றும் ஆர்டிஜிஎஸ் போன்ற பேமெண்ட் தளங்களின் வழியாக மோசடி செய்பவர்களின் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். அனைத்து செயல்முறையும் முறையானதாகத் தோன்றுவதற்காக மோசடி செய்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வழங்கப்படும் போலி ரசீதுகளை போலவே ரசிதுகளையும் வழங்கியுள்ளனர். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க என்று சொல்லும் அளவுக்கு பக்கா பிளானோடு இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
இதன் காரணமாக சர்மா மொத்தம் ரூ.45.5 லட்ச ரூபாயை அனுப்பியுள்ளார். பிறகு சந்தேகம் அடைந்த சர்மா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அருகில் உள்ள சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டார். அவரது புகாரின் அடிப்படையில், IT சட்டத்தின் பிரிவுகள் 66(C) மற்றும் 66(D) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆள் பேர் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம் என்றும், பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்றும் காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்தாலும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. இதுபோன்ற மோசடி அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக அழைப்பாளரின் விவரங்களை வைத்து அருகில் உள்ள காவல்துறையில் புகார் அளியுங்கள். அதோடு குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்களுக்கு தெரியாத விஷயங்கள் பிறருக்கு தெரியலாம். இது மோசடி என்று ஒருவருக்கு தெரிந்தாலும் பண இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications