சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 47வது வருடாந்திர பொது கூட்டம் இன்று நடந்தது. இதில் பேசிய ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, 'ஜியோ பிரைன்' என்று அழைக்கப்படும் முழு AI லைப்சைக்கிள் உள்ளடக்கிய டூல்ஸ் மற்றும் தளங்களின் தொகுப்பை உருவாக்கி வருகிறது என்று தெரிவித்தார்.
இதோடு முகேஷ் அம்பானி ஜியோ AI கிளவுட்டை அறிமுகப்படுத்தினார், இந்த தீபாவளி முதல் ஜியோ பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பு தளத்தைக் கொடுப்பதாக அறிவித்தார்.

உலகம் முழுவதும் ஏஐ சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் ஏஐ சேவைக்குள்ள நுழைந்துள்ளது பாராட்டத்தக்கது. இந்த ஜியோ பிரைன் சேவை மக்கள் மத்தியிலும், நிறுவனங்கள் மத்தியிலும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ பிரைன் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் நிறுவனத்தின் கிரீன் எனர்ஜியில் இயங்கும் கிகாவாட் அளவிலான AI ரெடி டேட்டா சென்டரை அமைக்கப்படும் என்று கூறினார்.
"நாடு முழுவதிலும் உள்ள ரிலையன்ஸ்-க்கு சொந்தமான இடத்தில் AI கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது இந்தியாவில் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வது மட்டும் அல்லாமல் அதன் பயன்பாட்டை மலிவு விலையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து விரிவுபடுத்துவோம்" என்று கூறினார் முகேஷ் அம்பானி.
ஜியோ பிரைன் என்றால் என்ன?
ஜியோ பிரைன், ஜியோ நிறுவனத்தின் அனைத்து சேவைகளிலும் AI பயன்பாட்டை வேகமாகக் கொண்டு வர எங்களுக்கு உதவுகிறது. இத்தகைய ஏஐ சேவைகள் மூலம் நிறுவனத்தில் டேட்டா அடிப்படையில் வேகமான முடிவுகள், துல்லியமான கணிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
"இந்த ஜியோ பிரையன் சேவயை ஜியோ நிறுவனத்தில் மட்டும் பயன்படுத்தாமல் ரிலையன்ஸின் மற்ற நிறுவனங்களிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். ரிலையன்ஸ் வழியாக ஜியோ பிரைனை முழு திறன் வாய்ந்த ஏஐ தளமாக மெருகேற்றிய பின்பு, நாங்கள் மற்ற நிறுவனங்களுக்கும் வழங்கக்கூடிய சக்திவாய்ந்த AI சேவை தளமாக அறிமுகம் செய்வோம் என நான் நம்புகிறேன்" என்று முகேஷ் அம்பானி கூறினார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (JPL) இல் 67.03% பங்குகளை வைத்துள்ளது. இது ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சொத்துக்களைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications