துபாய்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, துபாயின் பாம் ஜுமேரா தீவில் 163 மில்லியன் டாலர் மதிப்பிலான (1349.60 கோடி ரூபாய் மதிப்பிலான) ஒரு ஆடம்பர மாளிகையை வாங்கியுள்ளார்.
ஸ்டார் பக்ஸ் மற்றும் H&M மற்றும் விக்டோரியா சீக்ரெட்ஸ் பிராண்டுகளான உள்ளூர் உரிமையாளர்களைக் கொண்ட, வணிகரான குவைத் அதிபர் முகமது அல்ஷாயாவின் குடும்பத்திடமிருந்து அம்பானி கடந்த வாரம் இந்த சொத்தினை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
சொகுசு வீடு
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னனியில் இருந்து வரும் முகேஷ் அம்பானி, தொடர்ந்து அவ்வப்போது இது போன்ற ரியல் எஸ்டேட் முதலீடுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்தியாவின் இரண்டாவது பணக்காரரான 84 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை வைத்துள்ள முகேஷ் அம்பானி, தனது இளையமகன் ஆனந்துக்காக 80 மில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு வீட்டினை சமீபத்தில் வாங்கினார்.
என்னென்ன வசதிகள்
ஆனந்த் அம்பானிக்கான வாங்கிய வீடும், தற்போது வாங்கியுள்ள வீட்டில் இருந்து அருகில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டில் 10 படுக்கையறைகள், ஒரு ஸ்பா, உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் குளங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒபாம் ஜீரோவில் சமீபத்திய காலமாக உலகின் மிகப்பெரிய பணக்காரர்களும், பிரபலங்களும் இங்கு வீடுகளை வாங்கி வருகின்றனர்.
பாம் ஜுமேரா தீவு
பாம் ஜுமேரா தீவு இயற்கையான தீவு அல்ல. இது கடலில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை தீவு ஆகும். நூற்றுக்கணக்கான நட்சத்திர ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், கேளிக்கை மாளிகைகள் என பலவற்றையும் பாம் ஜூமேரா மிஞ்சிவிடும் என்று கூறப்படுகின்றது.
இந்தியர்களை ஈர்க்கும்
இத்தகைய சொகுசு வசதிகளை கொண்ட இந்த வீட்டினை வாங்கிய பின்னர், அம்பானி குடும்பம் தற்போது மீண்டும் ஒரு வீட்டினை வாங்கியுள்ளது. எனினும் இதில் எந்த மாதிரியான வசதிகள் உள்ளது என்பது குறித்தான விவரங்கள் வெளியாகவில்லை.
இந்தியர்களின் விருப்பமான ரியல் எஸ்டேட் தளமாக துபாய் மாறி வருகின்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மக்கள் தொகையில் 80% வெளி நாட்டு குடியிருப்பாளர் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications