ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் நவம்பர் 21 வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது குறித்து ஊழியர்களுக்கு கூட முறையான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், அவர்களின் ஆக்சஸ் முதல் கொண்டு துண்டிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் தன் வசப்படுத்தியதிலிருந்து, தொடர்ந்து பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ட்விட்டரை லாபகரமானதாகக் கொண்டு செல்ல ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் ட்விட்டரில் இருந்து விலகிக் கொள்ளலாம் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
பலரும் ராஜினாமா?
இதற்கிடையில் ட்விட்டரில் ஏராளமான ஊழியர்கள் தாங்களாகவே முன் வந்து ராஜினாமா செய்து வருகின்றனராம். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மேற்கொண்டு வெளியே செல்லாமல் இருக்க இப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
#RIPtwitter
அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் ட்விட்டருக்கு, நெட்டிசன்கள் இரங்கல் #RIPTwitter என்ற ஹேஷ்டேக்கினை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது மட்டும் அல்ல #GoodByeTwitter என்பதும் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகின்றது.
சில பயனர்கள் எல்லாம் முடிந்து விட்டது. இனி ட்விட்டர் இல்லை என பதிவிட்டுள்ளார்.
இன்னும் செயலில் உள்ளதா?
ஒரு பயனர் ட்விட்டர் இன்னும் செயலில் உள்ளதா என்பதை நான் ஒவ்வொரு நொடிக்கு பிறகும் சரி பார்க்கின்றேன்.
ஒரு ட்விட்டர் பயனர் கடந்த 13 ஆண்டுகளாக உங்கள் அனைவருடன் ட்வீட் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என #RIPtwitter என பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் விரைவில் மூடப்படும்
ட்விட்டர் நிறுவனம் விரைவில் மூடப்படலாம் என்பதை நான் கண்டுபிடித்தேன்.ட்விட்டருக்கு #RIPtwitter என பதிவிட்டுள்ளார்.
இன்னும் பயனர்கள் ட்விருக்கு சமாதியே கட்டி விட்டனர் எனலாம்.
ட்விட்டரில் அடிக்கடி அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் ட்விட்டரினை அடிக்கடி செக் செய்வதாகவும், ட்விட்டர் இயங்குகிறதா? என்பதை அடிக்கடி பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கும் வாய்பிருக்கு?
ட்விட்டர் ஏற்கனவே பல ஊழியர்களை பணி நீக்கம் செய்து விட்டது. எலான் மஸ்க் அறிவிப்பால் பல ஊழியர்களும் தாங்களாகவே ராஜினாமா செய்தும் வருகின்றனர். ஆக ட்விட்டர் ஆப் விரைவில் முடங்கலாம். ஆக நிரந்தரமாக ட்விட்டர் முடங்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.