இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி-யின் மருமகன், ராஜ்ய சபா உறுப்பினரான சுதா மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்பு அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் பொறுப்பேற்கிறார்.
முன்னாள் பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக், உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனமான ஆந்த்ராப்பிக் ஆகியவற்றில் மூத்த ஆலோசகராக புதிதாக பணியில் சேர்ந்துள்ளார்.

பிரிட்டன் தேர்தலில் ரிஷி சுனக் தோற்றுப்போன நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றி வரும் ரிஷி சுனக், அடுத்தடுத்து முக்கியமான நிறுவனங்கள் முக்கிய ஆலோசகராக இணைந்து வருகிறார்.
ரிஷி சுனக், 2022 அக்டோபர் முதல் 2024 ஜூலை வரை இங்கிலாந்தின் பிரதமராக பணியாற்றினார், அதன் பிறகு பொது தேர்தலில் தோற்றுப்போன நிலையில், கான்சர்வேடிவ் கட்சி தலைவராக இருந்து விலகியவர் 2025 ஜூலை மாதம் கோல்ட்மேன் சாசஸ்-ன் மூத்த ஆலோசகராக இணைந்தார்.
இதை தொடர்ந்து இப்போது மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆந்த்ராப்பிக் ஆகியவற்றில் பகுதி நேர ஆலோசகராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றுள்ளாற் ரிஷி சுனக். இதுக்குறித்து தனது லிங்க்டின் பதிவிட்டுள்ளார் ரிஷி சுனக்.
ACOBA (Advisory Committee on Business Appointments) என்ற அரசு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ரிஷி சுனக் இரு நிறுவனங்களின் மூத்த தலைவர்களுடன் இணைந்து, மாஃக்ரோ-எகானமிக் மற்றும் ஜியோபாலிடிக்கல் போக்குகள், எப்படி தொழில்நுட்பம் மற்றும் சமூகத்துடன் இணைந்து செயல்படுகின்றன என்பது குறித்த ஆலோசகளையும், தனது பார்வைகளை வழங்குவார்.

இதேவேளையில் ரிஷி சுனக் தான் பணியாற்றும் நிறுவனங்களுக்கு பிரிட்டன் கொள்கை குறித்தும் எவ்விதமான ஆலோசனையும் வழங்கமாட்டார். இதேபோல் இந்த நிறுவனத்திற்காக பிரிட்டன் அரசிடமும், அரசு தலைவர்கள், அதிகாரிகளிடமும் தொடர்புகொள்ளமாட்டார் என் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர், கார்ப்ரேட் நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக இணைந்து பணியாற்றுவது, இதிலும் குறிப்பாக அதிகப்படியான நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் பணியாற்றுவது ரிஷி சுனக் மட்டும் தான்.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications