உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பிரச்சனையானது மெல்ல மெல்ல உலக நாடுகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
குறிப்பாக தற்போது தான் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருந்த பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு புறம் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், மறுபுறம் சப்ளை சங்கியில் பாதிப்பு, இதன் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் என ஒவ்வொன்றாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன.
செலவு அதிகரிக்கும்
இதனை ஏற்கனவே பலரும் அறிந்திருக்கலாம். இந்தியா பயன்படுத்தும் பெரும்பகுதி எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதே. அதிலும் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ள பிரச்சனைக்கு மத்தியில் இந்தியாவில் இறக்குமதி செலவினம் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என்பது இன்னொரு பிரச்சனை.
இறக்குமதி
இந்தியா பெரியளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ஜெம்ஸ் & ஜூவல்லரி, சமையல் ஆயில், உரங்கள் உள்ளிட்ட பலவும் அதிகளவில் இறக்குமதி செய்கின்றது. இதனால் இறக்குமதி செய்யப்படும் செலவானது நடப்பு நிதியாண்டில் 600 பில்லியன் டாலர்களுக்கு மேலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கலாம்
இந்த நெருக்கடியான பிரச்சனைக்கு மத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம். இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு மேற்கொண்டு சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய ரூபாயின் மதிப்பானது 75 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு காணப்படுகின்றது.
இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு
இது குறித்து ரேட்டிங் நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ், தற்போதுள்ள அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்கலாம். குறிப்பாக சமையல் எண்னெய் மற்றும் கேஸ், ஜெம்ஸ் & ஜூவல்லரி, கச்சா எண்ணெய், உரங்கள் என பலவும் இதனை ஊக்கப்படுத்தலாம். ஆக இறக்குமதி செலவினமானது 2022ம் நிதியாண்டில் 600 பில்லியன் டாலரை தாண்டலாம். இது முதல் 10 மாதங்களில் 492.9 பில்லியன் டாலராக இருந்தது என கூறியுள்ளது.
பணவீக்கம்
ஆக மேற்கண்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மேற்கோண்டு பணவீக்கம் உச்சம் தொடலாம். இது நடப்பு கணக்கு பற்றாக்குறையும் தூண்டலாம். நாணயத்தின் மதிப்பினை சரியத் தூண்டலாம். இதன் காரணமாக பொருளாதாரம் சரிவடையலாம். குறிப்பாக ஒரு பேரலுக்கு கச்சா எண்ணெய் விலை 5 டாலர் அதிகரிக்கலாம் என்றாலும் கூட, இது நடப்பு கணக்கு பாற்றாக்குறையை 6.6 பில்லியன் டாலர் அதிகரிக்கலாம்.
கமாடிட்டி விலை அதிகரிப்பு
ரஷ்யா - உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் ஏற்கனவே பல கமாடிட்டிகளின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தற்போது தான் மீட்சி கண்டு வரும் பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் அதிகரித்து வரும் விலைவாசியானது சாமானிய மக்களின் வாழ்வில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தும்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications