கார் மற்றும் விமான இன்ஜின் தயாரிப்பு உலகின் மன்னன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ம் முக்கியத் திட்டத்திற்கு ஒன்றிணைந்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது இன்ஜினியரிங் சென்டரில் பெரும் பகுதியை சிவில் ஏரோஸ்பேஸ் சேவைக்காக மாற்றிய அமைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் இக்கூட்டணி ஒப்பந்தம் மூலம் இன்போசிஸ் இந்த மாற்றத்திற்கு ஹெய் டெக் இன்ஜினியரிங் சேவை மற்றும் R&D சேவைகள் உடன் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவைகளை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்குக் கொடுக்க உள்ளது.
இதுகுறித்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் ஆசியச் சந்தை தலைவர் கிஷோர் ஜெயராமன் கூறுகையில், இன்போசிஸ் ரோல்ஸ் ராய் நிறுவனத்திற்கு நீண்ட காலக் கூட்டணியில் உள்ளது. தற்போது செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் இன்ஜினியரிங் சேவையில் பெரிய அளவிலான மாற்றத்தைச் செய்ய உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உலகில் சுமார் 150 நாடுகளில் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. மேலும் சுமார் 400 விமானம் மற்றும் குத்தகை வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
2019ல் மட்டும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சுமார் 1.46 பில்லியன் பவுண்ட் தொகையை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டத்திற்காக மட்டுமே முதலீடு செய்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் வர்த்தகம் முடியும் நேரத்தில் 0.36 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 1,142 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் 1,234 ரூபாய்க்குத் துவங்கிப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த இன்போசிஸ் பங்குகள் வர்த்தக முடிவில் கணிசமான உயர்வை அடைந்தது.