அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கப்பள்ளியில் ஒரு ஆண்டுக்கு 24 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தித்திறன் கொண்ட ஸ்டீல் உற்பத்தி ஆலை நிறுவப்பட உள்ளது. இந்த ஸ்டீல் ஆலை சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் நிறுவப்பட உள்ளது. ஆர்சிலர் மிட்டல் (ArcelorMittal) மற்றும் ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் (Nippon Steel) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக AM/NS இந்தியா ஸ்டீல் ஆலையை அமைக்கவுள்ளது. இது கிட்டத்தட்ட 70,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் கூடவிருக்கும் மாநில அமைச்சரவை கூட்டத்தில், அமைக்கப்பட இருக்கும் ஸ்டீல் உற்பத்தி ஆலை குறித்த விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. TDP தனது X பதிவில் இந்த திட்டத்தை "இந்தியாவின் மிகப்பெரிய முதலீடு" என்று கூறியுள்ளது.

இரும்பு ஆலையுடன் கூடுதலாக, மொத்தம் 17 துறைமுகங்களுக்கான திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக 11,198 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மொத்தம் 8,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். முதல் கட்டத்தில், 20.5 மெட்ரிக் டன்னை கையாளும் திறனுடன் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீல் ஆலை நிறுவுவதற்கான முன்மொழிவு ஆந்திரப் பிரதேசத்திற்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஏனெனில் ஸ்டீல் துறையானது ஜவுளித் தொழிலுக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
மேலும், AM / NS-இன் பிரதிநிதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு IT மற்றும் HRD அமைச்சர் நாரா லோகேஷை தொடர்பு கொண்டு, நக்கப்பள்ளியில் இரும்பு ஆலை அமைப்பது தொடர்பாக பேசியுள்ளனர்.
இரும்பு ஆலை இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்டத்தில், ஆலை ஆண்டுக்கு 7.3 மில்லியன் மெட்ரிக் டன் இரும்பு உற்பத்தி செய்யும். இரண்டாம் கட்டத்தில் ஆண்டுக்கு 24 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
புதிய ஸ்டீல் ஆலைக்கு 4,500 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், நக்கப்பள்ளியில் உள்ள பல்க் மருந்து பூங்காவிற்கு அருகில் உள்ள 1,800 ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது. ஸ்டீல் ஆலையின் முதல் கட்ட பணிகள் ஜனவரி 2029-ஆம் ஆண்டும், இரண்டாம் கட்ட பணிகள் 2033-ஆம் ஆண்டும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AMNS இந்தியா ஏற்கனவே சத்தீஸ்கரில் உள்ள கிரண்டுல் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகம் இடையே இரும்புக் குழாய்களைக் கொண்டுள்ளது, இது இரும்புத் தாது கொண்டு செல்லப் பயன்படுகிறது என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அதே பைப்லைனை நக்கப்பள்ளியில் உள்ள இரும்பு ஆலைக்கும் நீட்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், AMNS இந்தியா இரும்புத் தாது கொள்முதல் செய்ய அரசாங்க உதவியை நாடியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications