ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் புதிய ஸ்டீல் உற்பத்தி ஆலை.. 70,000 வேலைவாய்ப்புகள் வரப்போகுது!

அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கப்பள்ளியில் ஒரு ஆண்டுக்கு 24 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தித்திறன் கொண்ட ஸ்டீல் உற்பத்தி ஆலை நிறுவப்பட உள்ளது. இந்த ஸ்டீல் ஆலை சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் நிறுவப்பட உள்ளது. ஆர்சிலர் மிட்டல் (ArcelorMittal) மற்றும் ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் (Nippon Steel) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக AM/NS இந்தியா ஸ்டீல் ஆலையை அமைக்கவுள்ளது. இது கிட்டத்தட்ட 70,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் கூடவிருக்கும் மாநில அமைச்சரவை கூட்டத்தில், அமைக்கப்பட இருக்கும் ஸ்டீல் உற்பத்தி ஆலை குறித்த விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. TDP தனது X பதிவில் இந்த திட்டத்தை "இந்தியாவின் மிகப்பெரிய முதலீடு" என்று கூறியுள்ளது.

 ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் புதிய ஸ்டீல் உற்பத்தி ஆலை.. 70,000 வேலைவாய்ப்புகள் வரப்போகுது!


இரும்பு ஆலையுடன் கூடுதலாக, மொத்தம் 17 துறைமுகங்களுக்கான திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக 11,198 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மொத்தம் 8,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். முதல் கட்டத்தில், 20.5 மெட்ரிக் டன்னை கையாளும் திறனுடன் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டீல் ஆலை நிறுவுவதற்கான முன்மொழிவு ஆந்திரப் பிரதேசத்திற்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஏனெனில் ஸ்டீல் துறையானது ஜவுளித் தொழிலுக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

மேலும், AM / NS-இன் பிரதிநிதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு IT மற்றும் HRD அமைச்சர் நாரா லோகேஷை தொடர்பு கொண்டு, நக்கப்பள்ளியில் இரும்பு ஆலை அமைப்பது தொடர்பாக பேசியுள்ளனர்.

இரும்பு ஆலை இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்டத்தில், ஆலை ஆண்டுக்கு 7.3 மில்லியன் மெட்ரிக் டன் இரும்பு உற்பத்தி செய்யும். இரண்டாம் கட்டத்தில் ஆண்டுக்கு 24 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புதிய ஸ்டீல் ஆலைக்கு 4,500 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், நக்கப்பள்ளியில் உள்ள பல்க் மருந்து பூங்காவிற்கு அருகில் உள்ள 1,800 ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது. ஸ்டீல் ஆலையின் முதல் கட்ட பணிகள் ஜனவரி 2029-ஆம் ஆண்டும், இரண்டாம் கட்ட பணிகள் 2033-ஆம் ஆண்டும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AMNS இந்தியா ஏற்கனவே சத்தீஸ்கரில் உள்ள கிரண்டுல் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகம் இடையே இரும்புக் குழாய்களைக் கொண்டுள்ளது, இது இரும்புத் தாது கொண்டு செல்லப் பயன்படுகிறது என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அதே பைப்லைனை நக்கப்பள்ளியில் உள்ள இரும்பு ஆலைக்கும் நீட்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், AMNS இந்தியா இரும்புத் தாது கொள்முதல் செய்ய அரசாங்க உதவியை நாடியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+