சிக்கன் விற்பனையின் மூலம் ஒரு நிறுவனம் 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் உண்மை அது தான்.
கேரளாவில் உள்ள குடும்பஸ்ரீ கேரளா சிக்கன் 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்து அசத்தியுள்ளது.
கேரள மாநில அரசின் நிறுவனமான இந்த நிறுவனத்தின் வெற்றி பாதை குறித்து தற்போது பார்ப்போம்.
கேரளா சிக்கன் மார்க்கெட்
கேரள மாநிலத்தில் சிக்கன் மார்க்கெட் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்திற்கு சுமாராக தினமும் 10 லட்சம் கோழிகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் ஒட்டுமொத்த கோழி உற்பத்தி வெறும் 10 சதவீதம் மட்டுமே என்பதால் மீதமுள்ள 90 சதவீத தேவையை மற்ற மாநிலங்களை கேரளா நம்பியிருந்தது.
கோழிப்பண்ணை
இந்த நிலையில்தான் கேரளாவை ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவிலேயே கோழி பண்ணை அமைக்கும் திட்டத்தை தொடங்க முடிவு செய்தது. அதுதான் குடும்பஸ்ரீ கேரளா சிக்கன்.
குடும்பஸ்ரீ கேரளா சிக்கன்
கடந்த 2017ஆம் ஆண்டு கேரள அரசின் கால்நடை பராமரிப்பு துறை, மாநில கோழி வளர்ப்பு கழகம், கேரளா கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தொடங்கியதுதான் இந்த குடும்பஸ்ரீ கேரள சிக்கன் நிறுவனம். இதுவரை சுமார் 80 லட்சம் கிலோ கோழி இறைச்சி சப்ளை செய்யப்பட்டு உள்ளதாகவும் அது அதுமட்டுமின்றி சந்தை விலையை விட மிகவும் மலிவான விலைக்கு சப்ளை செய்யப்பட்டு உள்ளதாகவும் குடும்பஸ்ரீ கேரளா சிக்கன் தெரிவித்துள்ளது.
எந்தெந்த நகரங்கள்?
திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் தற்போது செயல்பட்டு வரும் குடும்பஸ்ரீ கேரளா சிக்கன், விரைவில் மற்ற நகரங்களிலும் தொடங்க திட்டமிட்டு உள்ளது.
விவசாயிகள்
இந்த திட்டத்தின்படி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கோழி வளர்ப்பது எப்படி? என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து பயிற்சிகளும் முடிந்த பின்னர் கோழிக்குஞ்சுகள், தீவனம் ஆகியவை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவ்வப்போது கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி மற்றும் தரமும் குடும்பஸ்ரீ கேரள நிறுவனத்தால் கண்காணிக்கப்படுகிறது.
வருமானம் எவ்வளவு?
40 முதல் 45 நாட்கள் கழித்து கோழி குஞ்சுகள் சுமார் 2 கிலோ எடையை எட்டியதும் விவசாயிகளிடமிருந்து பணம் கொடுத்து கோழிகள் பெறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கோழிப் பண்ணையாளர்கள் மாதம் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும், அதேபோல் சிக்கன் விற்பனை நிலையங்கள் மாதம் 80,000 முதல் 90,000 வரை வருமானம் ஈட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மானியம்
அதேபோல் இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு 9.3 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த கட்டணமாகவும், 11.5 கோடி ரூபாய் விற்பனை நிலைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அது தவிர கால்நடை பராமரிப்பு துறை மூலமாகவும் சுமார் 23 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1000 புதிய பண்ணைகள்
அடுத்த 5 ஆண்டுகளில் கேரளாவில் பிராசஸிங் ஆலை ஒன்றை செயல்படுத்த இருப்பதாகவும் அதன்படி ஆண்டுக்கு 1000 புதிய பண்ணைகள் அமைக்கவும், 500 விற்பனை நிலையங்கள் புதிதாக தொடங்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டர்ன் ஓவர்
கடந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில் ரூ.6.2 கோடி மட்டுமே டர்ன் ஓவர் செய்த இந்த நிறுவனம் 2020 - 21 ஆம் நிதியாண்டில் 9 கோடியும் 2021 - 22 ஆம் நிதியாண்டில் 67 கோடி டர்ன் ஓவர்செய்து மொத்தம் 100 கோடி ரூபாய் டர்ன் ஓவரை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications