100 ரூபாய் பேடிஎம் மூலம் பணபரிமாற்றம் செய்ததை அடுத்து நான்கு கோடி ரூபாய் நகைக கொள்ளையை போலீசார் கண்டுபிடித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நகை கொள்ளையில் ஈடுபட கொள்ளையர்களில் ஒருவன் நூறு ரூபாய் கொடுத்து தேநீர் குடித்துவிட்டு டிஜிட்டல் மூலம் பணபரிமாற்றம் செய்துள்ளார்.
சிசிடிவி மூலம் இதனை கண்டுபிடித்த போலீசார் அதை வைத்து துப்பு துலக்கி ஒட்டுமொத்த கும்பலை பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நகைக்கொள்ளை
மத்திய டெல்லி பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலையில் நான்கு பேர் போலீஸ் வேடமிட்டு கூரியர் நிறுவன நிர்வாகிகளை அடித்துப் போட்டு ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துள்ளனர். நகைகள் உள்பட மதிப்பு மிக்க பொருட்களை அனுப்பும் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தின் இந்த கொள்ளையில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
சிசிடிவி காட்சி
இது குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்ட நிலையில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்த கொள்ளை நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை குறித்து புலன் விசாரணை செய்தனர்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றம்
அப்போது அதிகாலை 4.30 மணி அளவில் கொள்ளையர்களில் ஒருவன் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் குடித்துவிட்டு பணத்திற்கு பதிலாக 100 ரூபாய் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தேநீர் கடை
இதனை அடுத்து அந்த தேநீர் கடை உரிமையாளரை காவல்துறையினர் விசாரித்தபோது அந்த நபர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதை அடுத்து டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்ததாக கூறினார். இதனை அடுத்து தேநீர் கடைக்காரர் வங்கி கணக்கை ஆய்வு செய்த போலீசார் எந்த வங்கி கணக்கில் இருந்து பேடிஎம் மூலம் தேநீர் கடைக்காரருக்கு 100 ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதை கண்டுபிடித்தனர்.
கொள்ளையர் கண்டுபிடிப்பு
இதனை வைத்து அந்த கொள்ளையன், அவனுடைய முகவரி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்த போலீசார் கொள்ளையன் முகவரிக்கு சென்று கொள்ளையனை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்ற கொள்ளையர்களும் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களில் ஒருவன் நூறு ரூபாய் பேடிஎம் மூலம் பணபரிமாற்றம் செய்ததை அடுத்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மிகப்பெரிய கொள்ளை துப்பு துலங்கியுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications