கார்கள் என்றாலே பலருக்கும் விருப்பமான வாகனங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக சொகுசு வசதிகளை கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் என்பது பலரின் கனவாகவே இருக்கும்.
ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் தனது விலையுயர்ந்த மின்சார வாகனத்தை (Mercedes-AMG EQS 53 4MATIC (sedan)) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை 2.45 கோடி ரூபாயில் தொடங்குகிறது (எக்ஸ் ஷோரூம் விலையில்).
முதல் மின்சார கார்
கடந்த 2020 அக்டோபரில் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக 1.07 கோடி ரூபாயில் அதன் முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் தான் இந்தியாவின் தனது எலக்ட்ரிக் மொபைலிட்டி வணிகத்தினை மெர்சிடிஸ் பென்ஸ் தொடங்கியது. தற்போது இந்த பட்டியலில் ஒரு விலை உயர்ந்த காரினை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேட்டரி திறன்
இந்த கார்கள் முழுவதும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இறக்குமதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பல புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 107.8kWh திறனுடம் பேட்டரி திறனுடனும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இது தவிர இன்னும் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த 3- 4 மாதங்களில் புதிய கார்கள்
ஏராளமான பல அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த கார், நிச்சயம் கார் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அடுத்த மூன்று நான்கு மாதங்களில் இதன் பயணத்தை இன்னும் வேகப்படுத்தலாம் என்றும் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் மூன்று மின்சார கார்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
புதுவரவுகள்
அதே போல உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படும் மின்சார செடான் EQC 580 ஐ அடுத்த மாதம் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏழு இருக்கைகள் கொண்ட மின்சார SUV, EQB, நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இன்னும் புது வரவுகள் அடுத்தடுத்த மாதங்களில் சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவுள்ளன.
அசெம்பிளிங்-க்கு முக்கியத்துவம்
அதிகளவிலான இறக்குமதி வரியினை குறைக்க, உள்நாட்டில் அசெம்பிளிங் செய்யவுள்ளதாகவும், இதன் வளர்ச்சி 200% அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேட் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்படும் என தெரிகிறது.
இது குறித்தி மெர்சிண்டிஸ் பென்ஸ்-ன் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரி, நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனையில் 25% வளர்ச்சி காணலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications