தனது சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்ற முதலீட்டாளரான சவுரவ் தத்தா என்ற நபர், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த புதிய கருத்து ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் போதுமானதாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு கமெண்ட் செக்ஷனில் பலரும் தங்களுடைய மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் முழு விவரங்கள் குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.
தனது பதிவில், சவுரவ் தத்தா ஒரு குடும்பத்தின் மாதச் செலவுகளைப் பற்றிய தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் "3 பேர் கொண்ட குடும்பம் அத்தியாவசிய செலவுகள், வீட்டு வாடகை, கடன் தவணை ஆகியவற்றுக்கு ரூ.1 லட்சம் செலவு செய்யும். உணவு, திரைப்படம், ஓடிடி, சுற்றுலா போன்றவற்றுக்கு ரூ.25,000. அவசர செலவுகள் மற்றும் மருத்துவ செலவுக்கு ரூ.25,000. பிறகு முதலீடு செய்ய எதுவும் மிச்சம் இருக்காது" என்று கூறி பதிவிட்டுள்ளார்.

தத்தாவின் இந்த கருத்துக்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர் அவருடைய கணக்கீடுகளை ஏற்றுக் கொண்டாலும் பலர் அதற்கு மறுப்பு தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். அதில் ஒரு X பயனர் "ஒரு குடும்பம் மாதத்திற்கு மருத்துவத்திற்காக 25,000 மற்றும் வெளியில் சாப்பிடுவது, பயணங்கள் போன்ற பிற செலவுக்களுக்காக 25,000 என ஒருபோதும் செலவிடாது. தயவு செய்து அபத்தமான கணக்கீடுகளால் மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள்" என்று கூறியுள்ளார்.
இன்னொரு X பயனர் ரூ.25 லட்சத்தை வருடத்திற்கு சம்பளமாக பெறுபவர்கள் தங்களுடைய பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பதைப் பற்றி தெரிந்திருப்பார் என்று கூறியுள்ளார்.

மற்றொரு X பயனர் மொத்தம் 3 உறுப்பினர்களுடன் ஆண்டுக்கு 25 லட்சம் சம்பளமாக பெறும் ஒருவருக்கு வாடகை செலவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு எவ்வளவு செலவு செய்வது என்பது நன்றாக தெரிந்திருக்கும். மேலும் அவசர செலவுகளும், மருத்துவச் செலவுகளும் மாதாந்திர பில் கிடையாது என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதுபோன்ற சம்பளம் தொடர்பான கருத்துகளை முன்வைத்து சர்ச்சையை ஏற்படுத்துவது சவுரவ் தத்தாவிற்கு புதிதல்ல. ஏற்கனவே, ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் இன்றைய சூழலில் போதுமானதாக இல்லை என்றும், குறிப்பாக IT தொழில்நுட்பத் துறையில் இந்த தொகை குறைவு என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், பல ஆண்டுகள் அனுபவமுள்ள IT ஊழியர்களும் இவருடைய கருத்துக்கு உடன்படவில்லை. ஒருவரின் சம்பளம் போதுமானதா என்பது அவர்கள் வாழும் இடம், தொழில், அனுபவம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்தது என்று பலரும் அவருடைய பதிவுக்கு கருத்து தெரிவித்தனர்.
தற்போது பல IT நிறுவனங்களிலும் வேலை இழப்பு ஏற்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சவுரவ் தத்தாவின் இது போன்ற கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications