நம் நாட்டில் சில காலமாக கல்விச் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே ஊதியம் பெறுபவராக இருந்தால் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பெரும் சிக்கலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் ஒரு கல்வி நிறுவனம் 1-ஆம் வகுப்புக்கு ரூ.4 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நோட்டீசை வழங்கியுள்ளது. அந்த நோட்டீசை ஒருவர் தனது அதிகாரபூர்வ X தளத்தில் பகிர்ந்துள்ளார். இவருடைய பதிவு இந்தியாவில் உயரும் கல்விச் செலவு குறித்த பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
ரிஷாப் ஜெயின் என்ற நபர் ஜெய்ப்பூரில் உள்ள ஜெயஸ்ரீ பெருவால் இன்டர்நேஷனல் ஸ்கூலில் 1 வருட பள்ளிக் கட்டணமாக ரூ.4 லட்சம் கட்டச் சொல்லி பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதை தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதில் ஜாயினிங் கட்டணங்கள், பேருந்து கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், சீருடைகளுக்கான கட்டணம் ஆகியவை அடங்கும்.

ஜெயின் அப்லோட் செய்த போஸ்ட் பல பெற்றோர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த உதவியது. இவருடைய கமெண்ட்ஸ் செக்ஷனில் அதிகரித்து வரும் கல்விச் செலவுகள் குறித்து சில பெற்றோர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த பதிவு குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு கல்விச் செலவுகள் அதிகரிப்பதனால் ஏற்படும் தாக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ரிஷப் ஜெயின் தனது அதிகாரப்பூர்வ X பதிவில் நல்ல கல்வி என்பது ஆடம்பரம் ஆகிவிட்டது. இதை நடுத்தர வர்க்கத்தினரால் வாங்க முடியாது. என் மகளை அடுத்த ஆண்டு 1-ஆம் வகுப்பில் சேர்க்க இருக்கிறோம். எங்கள் மகளை சேர்க்க நாங்கள் பரிசீலிக்கும் பள்ளிகளில் இந்த பள்ளியும் ஒன்று. மற்ற பள்ளிகளில் பார்க்கலாம் என்றாலும் இதே போன்ற கட்டணம் தான் அங்கும் உள்ளது.

பதிவு கட்டணம் - ரூ.2,000
அட்மிஷன் கட்டணம் - ரூ.40,000
திருப்பி தரக்கூடிய செக்யூரிட்டி டெபாசிட் - ரூ.5,000
வருடாந்திர பள்ளிக் கட்டணம் - ரூ.2,52,000
பஸ் கட்டணம் - ரூ.1,08,000
புத்தகங்கள் மற்றும் சீருடைகள் - ரூ.20,000
மொத்தமாக வருடத்திற்கு ரூ.4,27,000
இதுதான் இந்தியாவில் தரமான கல்விக்கு வழங்கப்படும் விலை. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பாதித்தாலும் இதை வாங்க முடியுமா? முடியாது.. ஏனெனில் உங்களுடைய 20,000 டாலர் வருமானத்தில் 50 சதவீதம் வருமான வரி, ஜிஎஸ்டி, பெட்ரோல் மீதான வேட், சுங்கவரி நிலப்பதிவு கட்டணங்கள் போன்ற பலவற்றின் காரணமாக அரசாங்கம் பணம் பிடித்தம் செய்கிறது, அதோடு டேர்ம் இன்சூரன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் மற்றும் முதியோர் ஓய்வுதியத்திற்கான PF ஆகியவற்றையும் செலுத்த வேண்டும்.
ரூ.20 லட்சம் வருமானம் பெறுவதற்கு அதிகபட்சமாக 30% செஸ் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.10 லட்சத்தில் உணவுக்காக செலவு செய்வதா?, இஎம்ஐ வாடகை செலுத்துவதா? இரண்டு குழந்தைகளுக்கு பள்ளி கட்டணத்தை செலுத்துவதா? நீங்களே முடிவு செய்யுங்கள்.. என்று பதிவிட்டு இருந்தார். இவருடைய பதிவுக்கு இந்த கட்டணத்தோடு படித்தால் 12 வருடங்களுக்கு ரூ.1 முதல் ரூ.1.5 கோடி வரை செலவாகும் என்று ஒரு பயனர் பதிவிட்டிருந்தார்.
தரமான கல்வி ஒருபோதும் ஆடம்பரமாக இருக்கக் கூடாது. இது அடிப்படை உரிமையாக தான் இருக்க வேண்டும் என்று மற்றொரு நபர் பதிவிட்டு இருந்தார். இங்கு பலரும் ஸ்டேட்டஸை பார்க்கின்றனர். 1 சதவீத பள்ளிகள் மட்டுமே இந்த அளவு கட்டணம் வசூலிக்கின்றன. அதற்காக இந்த 1 சதவீத பள்ளிகள் மட்டும் தான் சிறந்த கல்வியை தரும் என்றெல்லாம் கிடையாது என்று கூறியிருந்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications