இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், ராகுல் தெவாட்டியா, மோகித் சர்மா மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் ஆகியோருக்கு குஜராத் சிஐடி சம்மன் அனுப்ப உள்ளது. இவர்கள் அனைவரும் ரூ.450 கோடி சிட்-பண்ட் ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாக ஃப்ரீ பிரஸ் ஜோர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களான சுப்மான் கில், ராகுல் தெவாடியா, மோஹித் சர்மா மற்றும் பி சாய் சுதர்சன் ஆகியோர் முதலீடு செய்த பணம் திருப்பித் தரவில்லை என்று தெரியவந்துள்ளது. சிஐடி அதிகாரிகளின் கூற்றுப்படி, அகமதாபாத் மிரர் அறிக்கையின்படி, குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் கில் ரூ.1.95 கோடி முதலீடு செய்துள்ளார் எனவும், மற்ற வீரர்கள் கணிசமாக சிறிய தொகையில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் கிடைப்பதைப் பொறுத்து விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிட் ஃபண்ட் ஆன போன்சி திட்டங்களின் மன்னரான பூபேந்திரசிங் ஜாலாவிடம் குஜராத் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்கிடையில், ஜாலாவின் கணக்குகளை கையாண்ட ருஷிக் மேத்தாவை சிஐடி அதிகாரிகள் பிடித்தது தெரியவந்துள்ளது.
மேத்தாவுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் ஜாலாவால் பராமரிக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற கணக்கு புத்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்ய கணக்காளர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வமற்ற புத்தகம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு இடங்களில் சோதனைகள் தொடர்கின்றன என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சிஐடியின் முதற்கட்ட விசாரணையில் ஜாலா 6000 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. ஜாலா ஒரு அதிகாரப்பூர்வமற்ற கணக்கு புத்தகத்தையும் பராமரித்துள்ளதாகவும், அதை சிஐடி குற்றப்பிரிவு கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது அந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் சுமார் ரூ. 52 கோடி ஆகும். தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில், மொத்தத் தொகை ரூ. 450 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், ரெய்டுகள் தொடரும் போது இவை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications