இந்தியாவில் கார் என்பது ஆடம்பரமான பொருள், பணக்காரர்களுக்கானது மட்டுமே என்ற கதையெல்லாம் மாரி ரொம்ப வருஷமாச்சு. இன்று கார் என்பது அத்தியாவசியமான வாகனமாக மாறியிருக்கும் வேளையில் அனைத்துத் தரப்பு மக்களும் அவரவர் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்றவாறு கார்களை வாங்கி வருகின்றனர்.
இதைவிட முக்கியமாக ஒரு காலத்தில் எஸ்யூவி காரை சிலர் மட்டுமே வாங்கும் நிலை இருந்தது, ஆனால் இப்போது எஸ்யூவி கார் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடும் அளவுக்கு இந்திய வர்த்தகச் சந்தையும், மக்களின் விருப்பமும் மாறியுள்ளது.

இதனால் வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் பல கொள்கைகள் மாற்றப்பட வேண்டிய கட்டாயம் தற்போது மத்திய மாநில அரசுக்கு உருவாகியுள்ளது.
இதற்குத் துவக்கமாக டெல்லி அரசு, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பழைய காரை ஸ்கிராப் செய்தால், புதிய கார் வாங்கும் போது சாலை வரியில் 50000 ரூபாய் வரையில் தள்ளுபடி அளிக்கும் வகையில் விதிகளை மாற்றியுள்ளது.
இந்தியாவில் முதல் மாநிலமாக டெல்லி அரசு எலக்ட்ரிக் கார்களுக்கு அதிகப்படியான ஊக்கம் கொடுத்து, தனிக் கொள்கை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது டெல்லி அரசு அம்மாநிலத்தில் பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து நீக்கும் முயற்சியாக இப்புதிய திருத்தை கொண்டு வந்துள்ளது.
பழைய டீசல் மற்றும் பெட்ரோல் கார்களை ஸ்கிராப் கொள்கை கீழ் அளிக்கப்பட்டால், காரின் உரிமையாளர் புதிய கார் வாங்கும் போது 50000 ரூபாய் சாலை வரியில் தள்ளுபடி வழங்கப்படும். இத்திட்ட விதிகள் திருத்தப்பட்டு டெல்லி போக்குவரத்துத் துறை அமலாக்கம் செய்துள்ள நிலையில் நிதியமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளிக்கக் காத்துக்கிடக்கிறது.
டெல்லி NCR பகுதியில் 15 வருடமான பெட்ரோல் வாகனமும், 10 வருடமான டீசல் வாகனமும் பயன்படுத்த முடியாது. இந்த விதிகள் அமலாக்கம் செய்யப்பட்டு இருக்கும் வேளையில் பழைய வாகனங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருக்கும் வேளையில் டெல்லி அரசு ஸ்கிராப் திட்ட சலுகையைக் கொண்டு வந்துள்ளது.
கார்களின் வயதை பொருத்த வரையில் 2021-22 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் மட்டும் டெல்லியில் மொத்த 55 லட்சம் கார்களின் ரிஜிஸ்ட்ரேஷன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதில் 1.4 லட்சம் கார்கள் மட்டுமே ஸ்கிராப் செய்யப்பட்டு உள்ளது, 6.3 கார்களுக்கு noc கொடுக்கப்பட்டு வேறு மாநிலத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
பழைய காரை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய காருக்கான சாலை வரியில் 50000 ரூபாய் தள்ளுபடி கொடுப்பது காரின் உரிமையாளருக்கு லாபகரமானதா..? உங்கள கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications