மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படுகிறார். தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
தல தோனியை கௌரவிக்கும் விதமாக 7 ரூபாய் நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமைத்துவத்தை கௌரவித்து அவருடைய ஜெர்சி எண்ணாண 7ஐ குறிப்பிட்டு இந்திய ரிசர்வ் வங்கி 7 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது என அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் படத்துடன் கூடிய நாணயம் வெளியிடப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
தல தோனியின் ரசிகர்கள் இதனை உற்சாகத்துடன் பகிர்ந்தனர். இதனிடையே இந்த தகவல் தவறானது என பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ (Press Information Bureau ) தெரிவித்துள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தில் வைரலான அந்த படத்தைப் பகிர்ந்துள்ள பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ, தோனியை கௌரவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி 7 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாக பரவிய தகவல் போலியானது என்றும், பொருளாதார விவகாரங்கள் துறை இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது.
இதனால் தல ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். மக்கள் இவ்வாறு சமூகவலைதளங்களில் வரும் தகவல்கள் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. பல்வேறு இணையதளங்களும் இந்த படத்தை உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தி படங்கள் போலியானது என உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னதாக மகேந்திர சிங் தோனி படத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் முயற்சிகள் இன்ஸ்டாவில் நடைபெற்றன. பேருந்துக்கு செல்ல பணமின்றி தோனி தவிப்பதாக கூறி போலியான படங்கள் இன்ஸ்டாவில் பகிரப்பட்டு பணம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மகேந்திர சிங் தோனி தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலேயே தக்க வைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோனியை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டனாக இருக்கிறார். இவர் தலைமையில் இந்திய அணி டி20 உலக கோப்பை மற்றும் ஒரு நாள் உலக கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. அதே போல சாம்பியன்ஸ் டிராபியும் வாங்கி இருக்கிறது. எனவே தான் இன்றளவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை கொண்டாடுகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் தோனி. இவர் தலைமையில் சிஎஸ்கே அணி 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறது. கடந்த சீசனுடன் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார். தொடர்ந்து அணிக்காக அவர் விளையாடினார். இந்த முறையும் அவர் சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்படுகிறார். வரும் 24ஆம் தேதி ஐபிஎல் அணி வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications