2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என்பது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது பதிப்பாகும். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்படுகிறது. 2025 பிப்ரவரி 19 முதல் மார்ச் 9, 2025 வரை நடத்தப்பட்டது மற்றும் பாக்கித்தானில் மூன்று இடங்களிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு இடத்திலும் 15 போட்டிகள் நடைபெற்றன.
2023 உலகக் கோப்பையில் இருந்து தகுதி பெற்ற முதல் எட்டு ஆண்கள் தேசிய அணிகள் இந்த போட்டியில் போட்டியிட்டன. ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இந்த போட்டியில் களமிறங்கியது. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி குரூப் சுற்றிலேயே வெளியேறியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சாம்பியன்ஸ் டிராபி 2025 ஐ சிறப்பாக நடத்த, பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டது. ராவல்பிண்டி, லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களை புதுப்பிக்க ரூ.500 கோடி செலவிட்டது. சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் விளையாடும் என்பதால், கண்காணிப்பு கேமராக்கள், காவல் படைகள், பாதுகாப்பு அலுவலர்கள் போன்றவற்றில் மட்டும் ரூ.120 கோடி செலவிடப்பட்டது. தொலைக்காட்சி ஒளிபரப்புகள், விளம்பர கமிட்டிகள் ஆகியவற்றில் ரூ.150 கோடி வரை பயன்படுத்தப்பட்டது.
ICC மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வாரியங்களுக்கு வழங்கிய கட்டணங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்டமிடல் செலவுகளுக்காக ரூ.100 கோடி. இதன்மூலம் மொத்தம் ரூ.869 கோடி வரை முதலீடு செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என்பது பெரிய பிரச்சினையாகியுள்ளது.
பாகிஸ்தான் அணியால் குரூப் கட்டத்திலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. முக்கிய போட்டிகளில் தோல்வியடைந்ததால், ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது. இதனால், டிக்கெட் விற்பனை மிகக் குறைந்தது. இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால், சில போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டன. இதனால், பாகிஸ்தானின் இடைத்தரகர்கள் மற்றும் விளம்பர ஆதாயம் குறைந்தது.
சில முக்கிய போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதால், ரசிகர்கள் கோபமடைந்தனர். இந்த காரணத்தினால் பல்வேறு ப்ரீமியம் ஸ்பான்சர்கள் உடனடி ஒப்பந்தங்களை ரத்து செய்தனர். இந்தியன் பிரிமியர் லீக் (IPL) போல அதிக விளம்பர வருவாய் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு சமமான மொத்த பார்வையாளர்களை ஈர்க்க முடியவில்லை.
இந்த நிதி இழப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்நிலையில், அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர், பாகிஸ்தானின் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 90% வரை வெட்டு விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு போட்டிக்கு ரூ.1000 வரை சம்பளம் பெற்ற வீரர்கள், இனி வெறும் ரூ.125-ரூ.200 மட்டுமே பெறுவார்கள். உள்நாட்டு கிரிக்கெட் செலவுகள் குறைக்கப்படுகின்றன. அரசு அனுசரணை குறைக்கப்பட்டதால், உள்ளூர் போட்டிகள் குறைவாக நடைபெறும். பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் போட்டிக்கு கூடுதல் நிதி வழங்க முடியாது.
ஏற்கனவே ஒப்பந்தமான ஸ்பான்சர்கள் மீண்டும் ஒருமுறை ஒப்பந்தங்களை மாற்ற வேண்டும். அரசு மட்டுமே நிதி வழங்க முடியாது என்பதால், வெளிநாட்டில் அதிக போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்காலத்தில் அதிகமான திட்டமிட்ட செலவுகளுடன் செயல்பட வேண்டும். இவ்வாறான நிதி நெருக்கடிகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, நவீன நிதி மேலாண்மை மற்றும் வருவாய் ஆதாரங்களை அதிகரிக்க திட்டமிடுவது அவசியம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications