டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் விப்ரோ போன்ற ஐ.டி. நிறுவனங்கள் அளவுக்கு சாமானிய மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் இல்லாத ஆனால் பல நூறு கோடியில் வருமானம் பெறும் நிறுவனம் தான் வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ்.
இந்த நிறுவனத்தின் நிறுவனர் கர்நாடகத்தின் சிறிய நகரில் பிறந்து வளர்ந்தவரான ஷான்பாக். இவரது ஊரில் உயர்நிலை பள்ளியோ அல்லது பெரிய கல்வி நிறுவனங்களோ கிடையாது. ஆகையால் அவர் கல்விக்காக அருகில் உள்ள நகருக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. படிப்பை முடித்தவுடன் பஞ்சாபில் மொஹாலியில் அரசு பணியில் சேர்ந்தார்.

சுமார் ஒன்றரை ஆண்டுகள் அந்த பணியில் இருந்த ஷான்பாக்குக்கு உள்ளூர்வாசிகளை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மறக்க முடியவில்லை. ஆகையால் தனது எண்ணத்தை செயல்படுத்துவோம் என்று அரசாங்க வேலையை ராஜினாமா செய்தார்.
பின்பு ஷான்பாக் 1991ம் ஆண்டில் பெங்களூருவில் ஷான்பாக் வெறும் ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு சிஸ்டம் மேம்பாட்டு சேவைகள் வழங்கும் வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
அந்த ஆண்டில்தான் நம் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை சந்திக்க தொடங்கியது. ஷான்பாக் முதலில் தனது நிறுவனத்தை சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடத்தினார்.
பட்டப்படிப்பு படித்தவர்களை பணியமர்த்தி அவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் சேவை பயிற்சிகளை வழங்கினார். வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களில் சுமார் 90 சதவீதம் பேர் கிராமப்புற பின்னணியில் இருந்து வந்தவர்கள், அவர்களில் 85 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதில் ஷான்பாக் உறுதியாக இருந்தார். சிறிய முதலீட்டில் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு சிஸ்டம் மேம்பாட்டு சேவைகள் வழங்கும் நிறுவனமாக தொடங்கிய வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ் இன்று தெற்காசியாவின் ஐ.டி. உள்கட்டமைப்பு சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஷான்பாக் இதனை அவ்வளவு எளிதாக சாதித்து விடவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் உலகத்தையே ஆட்டம் காணவைத்த 3 பொருளாதார மந்த நிலைகளை ஷான்பாக் சமாளித்து தனது நிறுவனத்தை திறம்பட நடத்தினார்.
வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் தற்போது 73 பார்ச்சூன் மற்றும் 500 நிறுவனங்களுக்கு ஐ.டி. உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குகிறது. 2020ம் ஆண்டில் வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் சுமார் ரூ.600 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
More From GoodReturns

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications