இந்தியாவில் UPI சேவை அறிமுகத்திற்கு பின்பு டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மத்திய அரசின் ரூபே கார்டுகளை தற்போது பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. இதில் முக்கியமாக சமீபத்தில் யூபிஐ செயலிகளில் ருபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்து பேமெண்ட் செய்யும் முறையை அறிமுகம் செய்தது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் பறந்து விரிந்து இருக்கும் வேளையில் ரூபே கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது இதை பெரிய அளவில் ஊக்கப்படுத்தப்பட்டு வருவது ஏன்.

ரூபே அட்டைகள் உருவாக்கம்: 2012 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தேசிய பேமெண்ட் நிர்வாகக் கழகம் (NPCI) உடன் இணைந்து ரூபே கட்டமைப்பை உருவாக்கியது. இது வெளிநாட்டு சார்பு இல்லாத, இந்தியாவிற்குள் செயல்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு நிதி பரிமாற்ற முறையாகும்.
வெளிநாட்டு விசா மற்றும் மாஸ்டர்கார்டு போன்ற சர்வதேச நிறுவனங்களைச் சார்ந்திருக்காமல், இந்தியாவிற்குள்ளேயே பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே ரூபேவின் முக்கிய நோக்கமாகும்.
ரூபே தரவு மேலாண்மை: இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய பேமெண்ட் நிர்வாகக் கழகம் ஆகியவை ரூபே தரவை பாதுகாப்பாகவும், மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடனும் பாதுகாப்பாகவும் நிர்வகிக்கின்றன. தரவு மையங்கள் இந்தியாவிற்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன, இதனால் இந்திய மக்களின் நிதி சார்ந்த தரவுகள் வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு மொத்தமாக தடைபெற்றுள்ளது. தரவு பாதுகாப்பை உறுதி செய்ய உயர்ந்த பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
மத்திய அரசு: ரூபேவின் நிர்வாகம் மற்றும் தரவு பாதுகாப்பில் இந்திய அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டு தலையீடு இல்லாமல், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
வெளிநாட்டு செலாவணி சேமிப்பு: இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு விசா மற்றும் மாஸ்டர்கார்டு பரிவர்த்தனைகளுக்கு, அதிக அளவிலான கட்டணங்கள் டாலர் மதிப்பில் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், ருபே அட்டைகள் உள்நாட்டு சேவை என்பதால், இத்தகைய கட்டணங்கள் இல்லாமல், இந்தியாவிற்குள்ளேயே பணம் புழங்குகிறது. இதனால், வெளிநாட்டு டாலர்கள் பயன்பாட்டை குறைத்து, இந்திய ரூபாயின் மதிப்பு உயர கணிசமாக உதவியது.
சுய தரவு பொருளாதாரம்: ருபே அட்டைகள் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. இதனால், இந்தியாவிற்குள் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான சார்பு குறைந்து, சுய தரவு பொருளாதாரத்தை நோக்கி நாம் பயணிக்க உதவுகின்றன.
டேட்டா சென்டர் வர்த்தகம்: ரூபே கார்டு தரவுகள் இந்தியாவுக்குள் சேமிக்கப்படுவது போல் விசா, மாஸ்ட்ர்கார்டு போன்ற நிறுவனங்களும், இந்தியர்களின் தரவுகளை இந்தியாவில் மட்டுமே சேமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இது பின்னாளில் அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாகியது, இதன் வாயிலாக இந்தியாவில் தற்போது டேட்டா சென்டர் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
மின்னணு பரிவர்த்தனை ஊக்குவிப்பு: பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு ருபே அட்டைகள் உறுதுணையாக விளங்குகின்றன. கிராமப்புறங்கள் கூட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு, எளிதான மற்றும் பாதுகாப்பான வழியாக ரூபே அட்டைகள் வழிவகுக்கின்றன. இதனால், கள்ளநோட்டு பிரச்சனை குறைந்து, வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கிறது.
கிராமப்புற சேர்க்கை: கிராமப்புற மக்கள் பலரும் வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதில் பிரச்சனை இருந்தாலும், ருபே க்ஷீட்ரகார்டு (RuPay Kshetra Card) போன்ற திட்டங்கள் அவர்களையும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் இணைக்கின்றன.
பாதுகாப்பான பரிவர்த்தனை: உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்களை ருபே அட்டைகள் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு சேவை என்பதால், தரவு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால், தரவு திருட்டு போன்ற சைபர் குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications