அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாய்க்கும் மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இது வரலாறு காணாத அளவு வீழ்ச்சியாகும். முந்தைய நாள் முடிவு விலையான 75.19ல் இருந்து 76.14 வரையில் வீழ்ச்சி கண்டுள்ளது
மேலும் இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 75.69 ரூபாயாக தொடங்கிய நிலையில், இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாலரின் வலிமை
சரி என்றும் இல்லாதளவுக்கு இவ்வளவு வீழ்ச்சி கண்டுள்ளதே என்ன காரணம். ஏன் இந்த படு வீழ்ச்சி. வாருங்கள் பார்க்கலாம். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவதே அமெரிக்கா டாலரின் வலிமை தான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய பொருளாதாரத்தினை மேலும் பின்னோக்கி கொண்டு செல்லும் அளவு கொரோனா வைரஸின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க மிக வேகமாக பரவி வருகிறது என்றே கூறலாம். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் சர்வதேச அளவில் 3,38,724 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,686 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் இந்தியாவில் குறிப்பாக 390 பேர் தாக்கம் அடைந்துள்ள நிலையில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
பங்கு சந்தைகள் வீழ்ச்சி
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால் பங்கு சந்தைகளில் முதலீடுகள் குறைந்துள்ள நிலையில், அன்னிய முதலீடுகள் வெளியேறி வருவதால் சந்தைகள் மேலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 2,873 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (9.61%) 27,042 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 822 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (9.42%) 7922 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
முடங்கிய வர்த்தகம்
சென்செக்ஸ் இது இரண்டாவது முறையாக லோவர் சர்கியூட் ஆகியுள்ள நிலையில், இது முதலீட்டாளர்கள் மத்தியில் இது இன்னும் மோசமான எண்ணங்களையே உருவாக்கி வருகிறது. இது உள்நாட்டு முதலீடுகளையே குறைத்து வரும் நிலையில், சந்தை மேலும் வீழ்ச்சிக்கு மேலும் வழிவகுத்துள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாய் 77 என்ற நிலையை தொட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications