மும்பை: கடந்த சில தினங்களாகவே ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், இன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து 75.04 ஆக காணப்படுகிறது.
அதிலும் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தாலும், ரூபாயின் மதிப்பானது சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இன்று காலை தொடக்கத்தில் 75.13 ரூபாயாக தொடங்கிய நிலையில், இது பின்னர் 75.04 ரூபாயாக சரிந்துள்ளது.

இது முந்தைய நாள் முடிவு விலையானது 75.01 ரூபாயாக சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சந்தை நாளில் ரூபாயின் மதிப்பானது அதிகபட்சமாக 74.85 ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், குறைந்தபட்சமாக 75.17 ரூபாயாக சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்கு சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்தால் பங்கு சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பினையும் இது ஆதரித்தது.
இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 748 புள்ளிகள் அதிகரித்து, 37,687 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 203 புள்ளிகள் அதிகரித்து, 11,095 ஆக முடிவடைந்துள்ளது.
தற்காலிக பரிவர்த்தனை தரவுகளின் படி, வெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் திங்களன்று ரூ.7,818.49 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளதால், மூலதன சந்தையில் நிகர வாங்குபவர்களாக இருந்தனர்.
இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையானது 1 சதவீதம் குறைந்து, பேரலுக்கு 43.71 டாலராக வர்த்தகமாகியுள்ளது. எனினும் இவை அனைத்தும் அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்புக்கு சாதகமாக அமைந்திருந்தாலும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. இன்று வரையில் 18,55,754 பேருக்கு கொரோனா தொற்று ஆளாகியுள்ளனர். 38,938 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கு இன்று வரையில் சரியான தடுப்பு மருந்துகள் என்பது இது வரை கண்டுபிடிக்க முடியாததால், பொருளாதாரத்தின் நிலை என்னவாகுமோ என்ற உணர்வும் தொடர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து 75 ரூபாய்க்கு மேல் இருந்து வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications