சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பானது வீழ்ச்சி காணவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சரிடம், ரூபாய் சரிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமெரிக்க டாலர் மதிப்பானது சர்வதேச சந்தையில் வலுவான நிலையில் உள்ளது. இதனால் மற்ற அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு எதிராகவே செயல்படுகின்றன.
எனினும் வளரும் நாடுகளில் ரூபாயின் மதிப்பானது வலுவாகவே காணப்படுகின்றது.
வரலாறு காணாத சரிவு
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையும் ஏற்றத்தினை நோக்கியதாகவே உள்ளது என கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தானது, ரூபாயின் மதிப்பானது 82.68 ரூபாயாக வரலாறு காணாத அளவு கடந்த வாரம் சரிவினைக் கண்ட நிலையில் வந்துள்ளது. இது கடந்த வியாழக்கிழமையன்று 82.32 ரூபாயாக இருந்தது. இது இறுதியாக 82.24 ரூபாயாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
வலுவான அடித்தளம்
இந்தியா பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக காணப்படுகின்றது. அன்னிய செலாவணி கையிருப்பும் சீராக உள்ளது. இதற்கிடையில் பணவீக்கம் என்பதும் மற்ற நாடுகளை காட்டிலும் சீராகவே உள்ளது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியும் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது மேற்கோண்டு ரூபாய்க்கு சாதகமாக அமைந்துள்ளது.
முக்கிய காரணிகள்
எனினும் தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை, வரலாறு காணாத அளவுக்கு ஏற்றம் கண்டு வரும் பணவீக்கம், பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கிகளின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கை என பல காரணிகளுக்கு மத்தியில், அன்னிய முதலீடானது தொடர்ந்து வெளியேறி வருகின்றது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது.
பொருளாதார வளர்ச்சியில் தாக்கம்
தொடர்ந்து வெளிநாட்டு நிபுணர்கள் தொடங்கி, இந்திய நிபுணர்கள் வரையில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்பினை செய்து வருகின்றன. எனினும் வளர்ச்சியிலேயே வைத்துள்ளது. இந்த வளர்ச்சி கணிப்புகளும் மற்ற நாட்டு வளர்ச்சி விகிதங்களை காட்டிலும் சீராகவே உள்ளது. இதுவும் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சப்ளை சங்கிலியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவிலும் லாக்டவுன் நடவடிக்கையானது இருந்து வருகின்றது. இதுவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications