டிரம்ப்-க்கு பல்பு கொடுத்த ரஷ்யா.. இந்தியாவின் ராஜதந்திரம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி உடன் வர்த்தக ஒப்பந்தத்திற்காக தொலைபேசியில் அழைத்து பேசிய போது இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து வாங்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியது தற்போது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா தனது கச்சா எண்ணெய் கொள்முதலை மாற்றுவதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் ரஷ்யா இதை மறுத்துள்ளது.

டிரம்ப்-க்கு பல்பு கொடுத்த ரஷ்யா.. இந்தியாவின் ராஜதந்திரம்..!!

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் புதன்கிழமை தெரிவிக்கையில் "இந்தியா எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெய் வாங்க சுதந்திரம் கொண்டு உள்ளது. ரஷ்யா இந்தியாவுக்கு ஒரே எண்ணெய் சப்ளையர் அல்ல. இந்தியா காலம் காலமாக பல நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதில் புதிதாக எதுவும் இல்லை" என்று கூறினார்.

மேலும் பெஸ்கோவ், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ரஷ்ய தனியார் வணிக ரேடியோ காமர்சன்ட் FM-இல் வெளியான செய்தியின்படி, பிரதமர் மோடி ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்திலும் குறிப்பிடவில்லை.

மேலும் தேசிய எரிசக்தி பாதுகாப்பு அமைப்பின் மூத்த நிபுணர் இகோர் யுஷ்கோவ் கூறுகையில், இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்த முடியாது. ரஷ்ய எண்ணெய் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது. விலை மற்றும் சப்ளை நிலைத்தன்மை ஆகியவை ரஷ்யாவை முக்கிய சப்ளையராக வைத்துள்ளன எனவும் விளக்கினார்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் நுகர்வை தொடர்ந்து பல்வகைப்படுத்தி வருகிறது. 2022க்கு முன்பு ரஷ்யாவிலிருந்து மிகக் குறைவாகவே கச்சா எண்ணெய் வாங்கியது. ஆனால் உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தின. அப்போது இந்தியா தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்கியது. இது இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க உதவியது.

இந்தியாவின் எரிசக்தி கொள்கை எப்போதும் நுகர்வோர் தேவை மற்றும் விலை நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விலை ஸ்திரத்தன்மை முக்கியம் என்ற அடிப்படையில் தான் கச்சா எண்ணெய்யை உலக நாடுகளில் இருந்து வாங்கி வருகிறது.

இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குவதை அதிகரித்து வருகிறது. ஆனால் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை திடீரென நிறுத்துவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.

கச்சா எண்ணெய் விலை நிலவரம்:
சர்வதேத சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று சிறிய அளவிலான உயர்வுடன் காணப்படுகிறது. WTI க்ரூட் ஆயில் ஒரு பேரல் 63.61 டாலருக்கு வர்த்தகமாகிறது. இது நேற்றைய அளவை காட்டிலும் 0.63% அதிகமாகும். இதேபோல்
பிரென்ட் க்ரூட் ஆயில் 67.87 டாலருக்கும் (+0.80%), முர்பான் க்ரூட் ஆயில் 68.64 டாலருக்கும் (+0.53%) உயர்ந்துள்ளது.

இந்த சிறிய உயர்வும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தேவை அதிகரிப்பு மற்றும் சப்ளை நிலவரத்தால் ஏற்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+