ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து கிடைத்து வரும் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கடந்த நிதியாண்டில் (2023-2024) 15.9 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருளும், எரிசக்தியும் எந்த அளவுக்கு முக்கியம் என்பது சொல்லத் தேவையில்லை. இந்த நிலையில் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80-90 சதவீதம் இறக்குமதி வாயிலாகப் பூர்த்தி செய்யப்படும் வேளையில் அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான தொகையை இதற்காகச் செலவு செய்கிறது.

இந்திய அரசு கடந்த ஆண்டு கச்சா எண்ணெய்க்காக 157.5 பில்லியன் டாலர் செலவு செய்திருந்த நிலையில், 2023-2024 நிதியாண்டில் ரஷ்யாவின் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் கிடைத்த காரணத்தால் 132.4 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை மட்டுமே செலவு செய்யப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி அளவில் பெரிய மாற்றங்கள் இல்லாத வேளையிலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்ட வேளையிலும் கச்சா எண்ணெய்க்கான செலவு 15.9 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. 2022 - 2023 ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் செலவு 30.4 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (Petroleum Planning and Analysis Cell) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2023-24 நிதியாண்டில் இந்தியா 232.5 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டை விட 0.1 சதவீதம் குறைவு மட்டுமே. இருப்பினும், இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இறக்குமதி அளவு கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை விட அதிகமாகவே உள்ளது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் இறக்குமதி அளவு 2023-24 நிதியாண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 87.4 சதவீதம் மற்றும் 85.5 சதவீதமாக இருந்த இது, 2023-24 நிதிய ஆண்டில் 87.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பெட்ரோலியம் பொருட்களின் நுகர்வு அடிப்படையில் கணக்கிடப்பட்டால், மார்ச் மாதத்தில் இறக்குமதி சார்ந்த கச்சா எண்ணெய் அளவு 88 சதவீதத்தை எட்டியுள்ளது.
இறுதியாக இந்த லாபம் மக்களுக்கு சென்றடையவில்லை என்பது தான் முக்கியமாக விஷயம், இந்தியாவில் 600 நாட்களுக்கும் அதிகமாக பெட்ரோல், டீசல் குறையாமல் வைத்துள்ளது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள்.
பொது தேர்தல் நாள் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக 2024 ஆம் நிதியாண்டு முடிய 15 நாட்கள் மட்டுமே இருந்த வேலையில் பெட்ரோல், டீசல் விலை 663 நாட்களுக்குப் பின்பு இந்தியா முழுவதும் எவ்விதமான பாகுபாடுமின்றி லிட்டருக்கு 2 ரூபாய் குறைந்தது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL) நிறுவனங்கள். இந்த விலை குறைப்பு மார்ச் 15ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.
More From GoodReturns

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வரிசை கட்டி நிற்கும் மக்கள்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications