ரஷ்ய அரசின் புதிய வெளியுறவு கொள்கையில் இந்தியா இனி முக்கிய பங்கு வகிக்கும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் முதலீடு, வர்த்தகம் என பல துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் எனவும் ரஷ்ய அரசு தனது வெளியுறவு கொள்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ராஸ்நெப்ட் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவின் மூலம் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலையில் முக்கிய மாற்றத்தை துபாய் கொண்டு வர போகிறது.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போருக்கு பின்பு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவு வேகமாக அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக சவுதி, ஈரான் நாடுகளை ஓரம்கட்டிவிட்டு ரஷ்யா முதல் இடத்தை பிடித்துள்ளது.
கச்சா எண்ணெய்
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்-ஐ இந்தியா பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் 30 முதல் 40 சதவீத டிஸ்கவுன்ட் உடன் பெற்று வருகிறது. இதன் மூலம் இந்தியா - ரஷ்யா மத்தியிலான கச்சா எண்ணெய்-க்கு பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்கிறது.
Rosneft மற்றும் இந்தியன் ஆயில்
இந்த நிலையில் Rosneft மற்றும் இந்தியன் ஆயில் கார்ப் ஆகியவை துபாய் கச்சா எண்ணெய்-யின் ஆசிய விலை நிலவரத்தை பென்ச்மார்க் ஆக நிர்ணயம் செய்துள்ளது. சமீபத்தில் இந்தியன் ஆயில் வாங்கிய கச்சா எண்ணெய் கூட துபாய் விலை நிலவரத்தை தான் பென்ச்மார்க் ஆக நிர்ணயம் செய்துள்ளது.
ஐரோப்பா-வுக்கு கட்
ரஷ்யா அரசு உத்தரவின் பெயரில் ஒரு துளி கச்சா எண்ணெய் கூட ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்படுவது இல்லை, இதனால் ஐரோப்பிய சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா கூடுதலான தொகையை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, இதை மாற்றும் விதமாக துபாய் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு கூடுதல் நன்மை
இது மட்டும் அல்லாமல் இந்தியா ரஷ்யாவுக்கு ரூபாய் அடிப்படையில் தான் பேமெண்ட் அளித்து வருகிறது, இது இந்தியாவுக்கு கூடுதல் நன்மை. ஐரோப்பாவிற்கு இணையான ஏற்றுமதியை இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிடும் ரஷ்யா மார்ச் 29ஆம் தேதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி ரஷ்யாவின் ராஸ்நெப்ட், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கான ஏற்றுமதியை 2 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
15 லட்சம் டன் டார்கெட்
ஏப்ரல் மாதம் முதல் ரஷ்யாவின் ராஸ்நெப்ட் மட்டும் ஒரு மாதத்திற்கு சுமார் 15 லட்சம் டன் கச்சா எண்ணெய்-ஐ இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
22 மடங்கு உயர்வு
இதேவேளையில் ரஷ்ய துணை பிரதமரான Alexander Novak செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 22 மடங்கு அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications