மாஸ்கோ: மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருக்கும் ரஷ்யா, இந்தியாவிற்கு நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. பொதுவாக சீனா தான் ரஷ்யாவிடமிருந்து அதிகப்படியான நிலக்கரியை வாங்கும் ஒரு நாடாக இருக்கிறது. ஆனால் தற்போது சீனா நிலக்கரியை கொண்டு மின்சாரம் தயாரிப்பதை படிப்படியாக குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக நிலக்கரி இறக்குமதியையும் குறைத்துக் கொள்ள சீனா முடிவு செய்துள்ளது. எனவே ரஷ்யா சீனாவுக்கு அடுத்தபடியாக நிலக்கரி மூலம் அதிக மின்சாரம் தயாரிக்க நாடான இந்தியாவிற்கு நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

சீனாவை தொடர்ந்து இந்தியாவிற்கான நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்க ஆர்வம் காட்டுகிறோம் என ரஷ்யாவின் துணை பிரதமரான அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே மின்சார உற்பத்திக்காக மாற்று எரிசக்தி நடைமுறைகளில் கவனம் செலுத்தினாலும் நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.
இந்தியாவை பொருத்தவரை நிலக்கரி உற்பத்தி கடந்த நிதியாண்டில் 997.828 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்தது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகமாகும்.
அதாவது 2023 ஆம் ஆண்டின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் சுமார் 75 சதவீதம் நிலக்கரியில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் இந்தியா 176 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது.ச் இதில் பெரும்பாலானவை மின்சார உற்பத்திக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு 26.2 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டன்களாக இருந்தது.
ஏற்கனவே ரஷ்யா இந்தியாவிற்கு பெருமளவிலான கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. இத்துடன் நிலக்கரி விற்பனையும் அதிகரிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது. உக்ரைனுடனான சண்டையை தொடர்ந்து பல்வேறு மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன. மேலும் ரஷ்ய நிறுவனங்களுக்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் காரணமாக ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்திய நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. தற்போது கச்சா எண்ணெயயுடன் நிலக்கரி ஏற்றுமதியையும் ரஷ்யா அதிகரிக்க முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக தள்ளுபடி விலையில் கூட நிலக்கரியை வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தியை குறைக்க வேண்டும் அதே வேளையில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட மாற்று சக்திகள் வழியே மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது. இருந்தாலும் நாட்டில் மின்சார தேவை அதிகரித்துள்ளதால் உடனடியாக நிலக்கரி மூலம் மின்சார தயாரிப்பை குறைக்க முடியாத சூழல் உண்டாகியுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications