ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உலக நாடுகளில் எந்த அளவிற்கு ஆதிக்கும் செலுத்துகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை நம்பி தான் மொத்த பொருளாதாரமும் உள்ளது. சமீபத்தில் ரஷ்யா தனது நார்டு ஸ்ட்ரீம் பைப்லைன்-ஐ பராமரிப்பு பணிகளுக்காக 10 நாடுகள் முடக்குவதாக அறிவித்த நிலையில் ஜெர்மனி நாட்டு மக்கள் சுடு தண்ணீர் கூடக் குறைவாகத் தான் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை இனி வரும் நாட்களிலும் உறுதி செய்யும் வகையில் புதிய முயற்சியை எடுக்கத் திட்டமிட்டு உள்ளது.
பென்ச்மார்க் ஆயில் இன்டெக்ஸ்
அமெரிக்கா, பிரிட்டன், சவுதி, ஐக்கிய அரபு நாடுகளின் கச்சா எண்ணெய்க்குத் தனித்தனியாக எண்ணெய் குறியீடு வைத்திருப்பது போல ரஷ்யாவும் தனது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு பென்ச்மார்க் ஆயில் இன்டெக்ஸ் உருவாக்க திட்டமிட்டு உள்ளது.
விளாடிமிர் புடின்
இந்த இன்டெக்ஸ் உருவாக்குவதன் மூலம் உலக நாடுகளின் தடைகளின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவது மட்டும் அல்லாமல் ரஷ்ய எண்ணெய் விலையின் மீது இருக்கும் கட்டுப்பாடுகளையும் நீக்க முடியும் என விளாடிமிர் புடின் தலைமையிலான அரசு நம்புகிறது.
ரஷ்யா
ரஷ்ய அரசு அதிகாரிகள், எண்ணெய் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், மத்திய வங்கி ஆகியவை இணைந்து ரஷ்யாவுக்கான தேசிய எண்ணெய் வர்த்தகத் தளத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவது பற்றிய ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளனர்.
WTI மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய்
இந்தத் தளத்தில் மூலம் ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்க விரும்புவோர் நேரடியாக அணுக முடிவது மட்டும் அல்லாமல் WTI மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய்க்கு இணையாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யும் சர்வதேச சந்தையில் உயரும்.
10 வருட முயற்சி தோல்வி
ரஷ்யா அரசு தனது கச்சா எண்ணெய்-க்கான பென்ச்மார்க் குறியீட்டை உருவாக்க கடந்த 10 வருடமாக முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளது. ஆனால் உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யா எதிர்கொள்ளும் சர்வதேச தடைகள் எதிரொலியாக எண்ணெய் நிறுவனங்களே தற்போது பென்ச்மார்க் குறியீட்டை உருவாக்க ஆர்வம் காட்டி வருகிறது.
பல பிரச்சனைகள்
இவை அனைத்திற்கும் மேலாக ரஷ்யா தனது பென்ச்மார்க் இன்டெக்ஸ் மற்றும் எண்ணெய் வர்த்தகத் தளத்தை உருவாக்கிய பின்பு ஒரு பேரல்-ஐ 40 -60 டாலர் விலையில் பட்டியலிடலாம் எனத் திட்டமிட்டு வருகிறது. ரஷ்யா விலையைக் குறைப்பது மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்றாலும் பல பிரச்சனைகள் உள்ளது என ரஷ்ய சந்தை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications