ரஷ்யாவின் கடுமையான எதிர்ப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய் உற்பத்தியாளார்களான சவுதி அரேபியாவும் ஒர் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் நிலைகுலைந்து போன உற்பத்தியாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.
சரி அப்படி என்னதான் நடந்தது, எதற்காக சவுதி இப்படி ஒரு முடிவை எடுத்தது. பலத்த வீழ்ச்சி கண்ட மறு நாளே மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது ஏன்? ஏன் இவ்வளவு அதிகரித்துள்ளது. வாருங்கள் பார்க்கலாம்.
தேவை குறைவு
சர்வதேச அளவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே கச்சா எண்ணெய் பயன்பாடானது குறைந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே போதுமான அளவுக்கு குறைந்திருந்தது. இந்த நிலையில் உலகளவில் தேவை குறைந்து வருகிறது. இதனால் உற்பத்தியை குறைக்கலாம் என ஒபெக் நாடுகள் கூறியது.
ரஷ்யா கைவிரிப்பு
மேலும் உற்பத்தியை குறைத்தால் தான் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஓபெக் நாடுகள் கூறின. குறிப்பாக சொல்லவேண்டுமானால் மார்ச் மாதம் வரையில் 2.2 மில்லியன் பேரல் உற்பத்தியை குறைத்த நிலையில், மேலும் தற்போது கூடுதலாக 1.5 மில்லியன் பேரல்களை குறைக்க திட்டமிடுகையில், ரஷ்யா அதற்கு முடியாது என திட்டவட்டமாக கைவிரித்துள்ளது.
ரஷ்யாவுக்கு பதிலடி
ரஷ்யாவின் இந்த எதிர்பார்ப்பால் கொதித்தெழுந்த சவுதி அரேபியா, ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இப்படி ஒரு பகீர் அறிவிப்பை வெளியிட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலையானது 1991ல் இருந்து ஒரு நாள் வீழ்ச்சியில் இது தான் அதிகம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த நிலைமை அப்படியே வேறுவிதமாக மாறிவிட்டது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம்
சவுதி அரேபியா கூறினால் என்ன, ரஷ்யா என்ன சொன்னால் என்ன நான் என்பாட்டுக்கு என் வேலையை செய்கிறேன் என்பது போல கச்சா எண்ணெய் விலை இன்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக WTI கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 5.72% ஏற்றம் கண்டு, 32.90 டாலர்களாக வர்த்தகம் ஆகிவருகிறது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.03% அதிகரித்து 36.09 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.
பங்குகளும் வீழ்ச்சி
இதனால் எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலைகளும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் உற்பத்தியாளர்கள் விலையை சரிவைக் ஈடுகட்ட செலவினை குறைக்க தொடங்கியுள்ளனர். இதனால் எக்ஸான் பங்குகள் 12% அதிகமாக வீழ்ச்சி கண்டன. இது கடந்த அக்டோபர் 15, 2008 முதல் இது மிகப்பெரிய ஒரு நாள் இழப்பாகும்.
உற்பத்தியை உயர்த்த திட்டம்
இதே போல் செவ்ரானின் பங்குகள் 15% வீழ்ச்சி கண்டுள்ளது. இது 1987ம் ஆண்டு முதல் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து சவுதி அரேபியா தனது உற்பத்தியை ஒரு நாளைக்கு 10 பில்லியன் பேரல்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது விலையை குறைக்க வழிவகுத்தது.
தன்னாலும் உற்பத்தியை குறைக்க முடியும்
ஆனால் சவுதியின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா சவுதி அரேபியாவினை போல தானும் ஒரு சிறந்த எண்ணெய் உற்பத்தியாளர் தான் என்று ரஷ்யா கூறியுள்ளது. மேலும் தனக்கும் உற்பத்தியை உயர்த்த முடியும் என்றும், ஆறு முதல் 10 ஆண்டுகள் வரையிலான விலை குறைப்பினை சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு



Click it and Unblock the Notifications