ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கங்கள் போர்க்களத்தைத் தாண்டி, உலகெங்கிலும் உள்ள தொழில்களை பாதித்து வருகின்றன. இத்தகைய முக்கியமான பாதிப்புகளில் ஒன்று, இந்தியாவின் முக்கிய வர்த்தக துறையாக இருக்கும் சூரத் வைரத் தொழில். சூரத் நகரில் மட்டும் சுமார் 4000 வைரம் பாலிஷ் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளால் சூரத்தின் வைர தொழிலில் ஈடுபட்டு இருக்கும் கைவினை கலைஞர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளரான ரஷ்யாவின் வைர சப்ளை மேற்கத்திய நாடுகளின் தடையின் காரணமாக முடங்கியதால், சூரத்தின் வைர தொழிற்சாலைகளுக்கு வைரம் கிடைப்பது குறைந்துள்ளது.

இதன் விளைவாக, சூரத் வைர தொழிலில் மந்தநிலைக்குள் தள்ளப்பட்டு உள்ளது. இது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலையை இழந்து, நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் பாலிஷ் செய்யப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைரத்தில் பெரும் பங்கீட்டை ரஷ்ய வைரங்கள் ஆட்கொண்டு உள்ளது.
ரஷ்யாவின் பாலிஷ் செய்யப்படாத வைரம் தரத்தில் சிறப்பாக இருக்கும் அதேவேளையில், விலையிலும் சற்று மலிவானது. இதனால் சூரத் வைர வியாபாரிகள் அதிகளவில் ரஷ்ய வைரங்களை வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து அதிகம் லாபம் பார்த்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய வைரங்களுக்கு ஏற்பட்ட தடையின் காரணமாகப் பிற நாடுகளில் இருந்து விலை உயர்ந்த வைரத்தை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் லாபம் குறைந்து, வர்த்தகமும் பாதிப்படைந்துள்ளது.
வைரத் தொழிலாளர்கள் சங்கம், கடந்த 16 மாதங்களில் குறைந்தது 65 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளது. இவர்கள் ஒரு மாதத்திற்குச் சராசரியாக ரூ. 25,000-30,000 சம்பாதித்து வந்துள்ளனர். தற்போது வைர தொழில் முடங்கியதால் மாற்று வேலைவாய்ப்புகளைத் தேடிக்கொள்ள முடியாமல் போனதால் இத்தகைய தவறான முடிவை எடுத்துள்ளனர்.
இந்திய அரசு, உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளரான ரஷ்யாவிலிருந்து பாலிஷ் செய்யப்படாத, வெட்டப்படாத வைர இறக்குமதிகள் மீதான மேற்கத்திய தடையை மூலம் இந்தியா எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து உலக அரங்கில் கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வைரத்தில் சுமார் 98 சதவீதம் சூரத்தில் இருந்து நடைப்பெறுகிறது. இந்த ஆண்டு, ஜி7 நாடுகள், ரஷ்யாவில் வெட்டப்பட்ட, பிராசஸ் செய்யப்பட்ட வைரங்களுக்கு தடை விதித்தது தான் சூரத்-ன் இந்த மோசமான நிலைக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
மார்ச் மாதம் முதல், ஜி7 தடை மூன்றாம் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரஷ்யா வைரங்களுக்கும் இந்த தடை விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இது சூரத் வைரம் பாலிஷ் தொழிலை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்கா தான் இந்தியாவில் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களுக்கான மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான சந்தையாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் கோபல் டிரேட் ரீசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) வெளியிட்டுள்ள தகவல்கள் சூரத் வைர தொழிலின் பாதிப்பைப் படம் போட்டுக் காட்டி வருகிறது. இந்தியாவுக்கு ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வைரங்களின் மதிப்பு 2021-22 இல் 18.5 பில்லியன் டாலராக இருந்தது ஆனால் 2023-24 இல் 14 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்



Click it and Unblock the Notifications