உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில், பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பல தடைகளை விதித்துள்ளன.
இதனால் தங்களுக்கு நஷ்டம் என ரஷ்யா கூறாவிட்டாலும், நிச்சயம் இழப்பு தான். ஏனெனில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் வணிகத்தில் முன்னணி நாடாக இருந்து வரும் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடை, கச்சா எண்ணெய் தடை உள்ளிட்ட பலவற்றால் பெரும் இழப்பு தான்.
குறிப்பாக இவ்விரு நாடுகளுக்கு இடையேடான பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்ய நிறுவனங்களுடனான வணிக உறவுகளை பல்வேறு நிறுவனங்கள் முறித்துக் கொண்டு வருகின்றன.
நடு நிலையான இந்தியா
இந்த நிலையில் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் பலவும் பலத்த சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்களது மெலிந்து போன வணிகத்தினை மேம்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ரஷ்யாவுக்கு நட்பு நாடாக இருந்து வரும் இந்தியா, இப்பிரச்சனைக்கும் மத்தியிலும் போரை கைவிடுங்கள் என்று நடு நிலையாகவே இருந்து வருகின்றது.
இந்தியாவுக்கு சலுகை
இதற்கிடையில் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்யவும், அதனை 25 - 27% தள்ளுபடி விலையில் கொடுக்கவும் அணுகவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உண்மையில் இது இந்தியாவுக்கு கிடைத்த மிக நல்ல வாய்ப்பே. எனினும் முன்னதாக அதிகளவில் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்தியா, அமெரிக்காவின் பொருளாதார தடையால் தற்போது சவுதியிடம் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது.
என்ன செய்யப் போகிறது இந்தியா?
இந்த நிலையில் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது தடை விதித்துள்ளன. இந்த நெருக்கடியான நிலையில் ரஷ்யா இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமா? அல்லது நடப்பது நடக்கட்டுமென ரஷ்யாவுடனான வணிக உறவினை இன்னும் மேம்படுத்திக் கொள்ளுமா? என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.
எவ்வளவு சலுகை?
இது குறித்து வெளியான செய்தியறிக்கையில் ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 27% வரையில் சலுகை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்தான டெண்டரும் இந்த வாரத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் இதனை ஏற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயன்படுத்திக் கொள்ளுமா?
ஏற்கனவே சவுதியிடம் அதிக சப்ளை கேட்ட நிலையில், அங்கு கிடைக்காதபட்சத்தில் மாற்று வழிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் அணுகி வந்தது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமா?
குறிப்பாக விட்டோல் குழுமம் ஒரு பேரலுக்கு 7 டாலர்களுக்கு மேலாக குறைவாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. மொத்தத்தில் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு இது நல்ல வாய்ப்பு தான். அதேசமயம் பொருளாதார தடைகள் பற்றிய அச்சமும் இருந்து வருகின்றது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications