ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை புதுப்பிக்கப்பட்ட தேசிய வெளியுறவுக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இப்புதிய கொள்கையில் இந்தியாவுடனான வர்த்தக மற்றும் நட்புறவுக்கு அதிகப்படியான முக்கியதுவம் அளித்துள்ளது. இந்தியாவில் நட்புறவுக்கு விளாடிமிர் புடின் பாராட்டினார்.
Recommended Video
ரஷ்யாவின் இப்புதிய தேசிய வெளியுறவுக் கொள்கை மூலம் இந்தியாவுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்துவதாக அறிவித்தார் விளாடிமிர் புடின்.
ரஷ்யாவுடன் எப்படியாவது நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பல முறை முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், விளாடிமிர் புடினின் ரஷ்ய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய தேசிய வெளியுறவுக் கொள்கையில் இந்தியா, சீனா மட்டுமே முக்கிய வர்த்தக உறவாக அங்கீகரித்துள்ளது. இந்த ஆவணத்தில் ஒரு இடத்தில் கூட பாகிஸ்தானை குறிப்பிடவில்லை.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் துவங்கிய நாளில் இருந்து ரஷ்யாவுக்கு அனைத்து பிரிவிலும் குறிப்பாக ரஷ்யா அரசின் கஜானாவை பாதுகாக்கும் முக்கிய வர்த்தகமாக கச்சா எண்ணெய்-ஐ இந்தியா தொடர்ந்து அதிகமாக வாங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு பெரிய நன்மை உள்ளது மறுக்க முடியாத உண்மை.
சீனா
சமீபத்தில் சீனா அரபு நாடுகளிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்புந்தத்தையும், முதலீட்டையும் செய்தது. இதன் மூலம் சீனாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
வெளியுறவுக் கொள்கை
இந்த நிலையில் தான் ரஷ்ய அரசின் புதுப்பிக்கப்பட்ட தேசிய வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவை முக்கிய வர்த்தக கூட்டணி நாடாக அறிவித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு
இரு தரப்புக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ரஷ்யா இந்திய குடியரசுடன் குறிப்பாக சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை தொடர்ந்து கட்டமைக்கும் என இக்கொள்கையில் ரஷ்யா அரசு குறிப்பிட்டு உள்ளது.
முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவு
இந்த கூட்டணி மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தின் அளவை அதிகரிப்பதற்கும், முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நட்பற்ற மாநிலங்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பிரிவிலும் துணை நிற்கவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று புடின் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்புகள்
மேலும் சர்வதேச நாடுகள் உடனான கூட்டணியை மேம்படுத்துவதற்கு பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, the Commonwealth of Independent States, யூரேசிய பொருளாதார ஒன்றியம், Collective Security Treaty Organisation, RIC (ரஷ்யா, இந்தியா, சீனா) ஆகியவற்றுடன் கூடுதல் பங்கீட்டை அளிக்க உள்ளதாகவும் ரஷ்யா தனது வெளியுறவு கொள்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்
சமீபத்தில் பாகிஸ்தான் அரசு, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிதியுதவியை பெறுவதற்காக பாகிஸ்தான் தன்னிடம் இருக்கும் 44 T-80UD ரக மெயின் battle tank-களை ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவம் பயன்படுத்த அளிப்பதாக தகவல் வெளியாகியானது. இதுவும் ரஷ்ய புதுப்பிக்கப்பட்ட வெளியுறவு கொள்கையில் பாகிஸ்தானை தவிர்க்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications