இந்திய மக்களின் மிகவும் முக்கியப் பண்டியாகக் கருதப்படும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட இந்திய மக்கள் தயாராகி வரும் நிலையில் நாட்டின் முன்னணி டெக்ஸ்டைல் உற்பத்தி நகமான சூரத் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளது.
கடந்த 2 வருடமாகக் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் முழுமையான குறிப்பாகச் சுதந்திரமான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடத் தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் சூரத் டெக்ஸ்டைல் மில் நிறுவனங்கள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
தீபாவளி பண்டிகை
இந்தத் தீபாவளி பண்டிகை வர்த்தக அளவு, பண மதிப்பில் புதிய சாதனையை அடையும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு நடுத்தரப் பொருளாதாரப் பிரிவில் இருக்கும் குடும்பம் குறைந்தபட்சம் 10000 ரூபாய் அளவிலான தொகையை இந்தத் தீபாவளிக்குச் செலவு செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
சூரத் டெக்ஸ்டைல்
இதனால் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனைக்குத் தயாராகியுள்ளது. இதற்கிடையில் டெக்ஸ்டைல் நகரமான சூரத் டெக்ஸ்டைல் மில்கள் கடந்த வருடத்தைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவான அளவான 8000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை மட்டுமே பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
50 சதவீத குறைவு
இந்த வருடம் விற்பனை சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டாலும் சூரத் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் 50 சதவீத குறைவான ஆர்டர்களை மட்டும் பெற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு என்ன காரணம்..? ரீடைல் சந்தையில் போதுமான டிமாண்ட் இல்லையா..? கடந்த சில நாட்களில் வெளியான கணிப்புகள் தவறா..?
CAIT அமைப்பு
இந்த நிலையில் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கூறுகையில் இந்தியாவில் இருக்கும் ரீடைல் கடை விற்பனையாளர்கள் கடந்த 2 வருட மந்தமான வர்த்தகத்தில் அதிகப்படியான ஸ்டாக் வைத்துள்ளனர். இதைப் பழைய இருப்பைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் ரீடைல் விற்பனையாளர்கள் இருக்கும் காரணத்தால் புதிய ஸ்டாக் எடுப்பதைக் குறைத்துள்ளனர்.
டிமாண்ட் அதிகம்
ஆனால் இந்த வருடம் இந்திய சந்தையில் எப்போதும் இல்லாத டிமாண்ட் உள்ளது என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார். ரீடைல் நிறுவனங்கள் பழைய ஸ்டாக்-ஐ தீர்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளதால் மக்களுக்குக் கூடுதலான தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications