சாகர்மாலா திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை 5.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 6.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய சாகர்மாலா தலைமை குழு முடிவுசெய்துள்ளது.
இப்போது சாகர்மாலா திட்டத்தின் கீழ் 5.5 லட்சம் கோடி ரூபாய்க்கு 802 பணிகள் நடைபெற்று வந்தன. புதிதாகக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பணிகளின் எண்ணிக்கை 1,537 ஆக உயர்ந்துள்ளது. 2035-ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
சாகர்மாலா திட்டம்
இந்தியத் துறைமுகங்கள் மற்றும் அவற்றுக்கான போக்குவரத்தைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அமைப்பதே சாகர்மாலா திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தினால் நாட்டின் கடற்கரை பகுதிகளில் தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும்.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
சாகர்மாலா திட்டப் பணிகள் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 99,281 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளன. 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் அரசு, தனியார் கூட்டணியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 51 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 200 பணிகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த இரண்டு வருடத்தில் இவை முடிந்துவிடும்.
துறைமுகங்களின் டிராப்பிக் அதிகரிப்பு
சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் முக்கிய துறைமுகங்களின் டிராபிக் 6.94 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும் தமிழ்நாட்டின் குளச்சல், கேரளாவின் விழிஞம், மகாராஷ்டிராவின் வாத்வான், கர்நாடகாவின் தடடி, ஆந்திரப் பிரதேசத்தின் மசிபிப்பட்டினம், மேற்கு வங்கத்தின் சாகர் தீவு துறைமுகங்களின் டிராபிக் பெரும் அளவில் அதிகரித்துள்ளது.
காத்திருப்பு நேரம் குறைப்பு
2014-2015 நிதியாண்டில் துறைமுகங்களிலிருந்து சரக்கை வெளியில் அனுப்பும் காத்திருப்பு நேரம் 96 மணி நேரமாக இருந்தது. அது இப்போது 35 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார். எனவே துறைமுகங்களில் இன்னும் அதிகமான டெர்மினிலஙள் மற்றும் சரக்கு இறக்குமதி பெர்த்துக்களை அமைக்கும் போது இந்த காத்திருப்பு நேரம் இன்னும் குறையும் என கூறப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications