பேட்மிண்டன்ல மட்டுமல்ல முதலீட்டிலும் வல்லவர் சாய்னா நேவால்.. எதில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா?

ஐதராபாத்: இந்தியாவில் நட்சத்திர தம்பதிகளாக இருந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பேட்மிண்டன் வீரர் பாருப்பள்ளி காஷ்யப் ஆகியோர் தங்களுடைய ஏழு ஆண்டுகால திருமணத்தை முடித்து கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் பரவலாக பேசப்படும் ஒரு விஷயமாக இது மாறி இருக்கிறது.

சாய்னா நேவால்: விளையாட்டு துறையில் சாதித்த பெண்கள் என்றாலே பலரது நினைவுக்கும் சாய்னா நேவால் தான் வருவார். சர்வதேச அளவில் மகளிர் பேட்மிண்டனில் பல்வேறு வெற்றிகளை குவித்து சாதனை படைத்தவர் தான் சாய்னா நேவால். ஐதராபாத்தை சேர்ந்த சாய்னா நேவாலுக்கும், பேட்மிண்டன் வீரர் பாருப்பள்ளி காஷ்யப்பிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

பேட்மிண்டன்ல மட்டுமல்ல முதலீட்டிலும் வல்லவர் சாய்னா நேவால்.. எதில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா?

விவாகரத்து செய்வதாக அறிவிப்பு: ஐதராபாத்தில் இருக்கும் கோபிசந்த் பயிற்சி மையத்தில் தான் இருவரும் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அப்போது இருவரிடையே நட்பு உண்டாகி பின்னர் காதலாக மாறியது. 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக இருவரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம்: இது தொடர்பாக தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் சாய்னா நேவால் வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது, பல்வேறு யோசனைகளுக்கு பிறகு நானும் கஷ்யப்பும் பிரிவதாக முடிவு செய்து இருக்கிறோம் என கூறியிருக்கிறார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக பேட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சாய்னா நேவால்.

தங்கப்பதக்கம்: 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்றார். பின்னர் 2010, 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்று தந்தார். பாருப்பள்ளி காஷ்யப்பும் பேட்மிண்டனில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்றவர். இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வந்த இருவரும் தற்பொழுது பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சாய்னாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?: சாய்னா நேவாலை பொறுத்தவரை அவருடைய சொத்து மதிப்பு சுமார் 37 கோடி ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பேட்மிண்டன் போட்டிகளில் விளையாடுவது மற்றும் விளம்பரங்களில் தோன்றுவது தவிர பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகள் செய்திருப்பதன் மூலம் இவருக்கு வருவாய் வருகிறது. விளம்பரங்களில் தோன்றுவதற்கு என கணிசமான தொகையை இவர் கட்டணமாக பெறுகிறார்.

விளையாட்டில் கிடைத்த வருமானம்: சாய்னா நேவால் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிட்டன் போட்டியில் 50 லட்சம் ரூபாயை பரிசு தொகையாக வென்றார். 2018 ஆம் ஆண்டு 16.5 கோடி ரூபாயும், 2019 ஆம் ஆண்டு 3 கோடி ரூபாயும், 2022 ஆம் ஆண்டு 5 கோடி ரூபாயும் இவர் பேட்மிண்டன் போட்டிகள் மூலம் மட்டுமே வருமானமாக பெற்றிருக்கிறார். ஐதராபாத்தில் தனக்கு சொந்தமாக 4.6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பை வைத்திருக்கிறார் , இது தவிர பல்வேறு நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்து இருக்கிறார் .

இரண்டு நிறுவனங்களில் முதலீடு: மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் Naarica என்ற நிறுவனத்திலும், பெர்சனல் கேர் தயாரிப்புகளை வழங்கும் Soothe Healthcare என்ற நிறுவனத்திலும் இவர் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனங்கள் வளர வளர இவரின் சொத்து மதிப்பும் வளர்ந்து வருகிறது. பாருப்பள்ளி காஷ்யப்பும் ஐதராபாத்தை சேர்ந்தவர் தான் அவர் சுமார் 12 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+