இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டு வருவது JSW குழுமம் மற்றும் ஷாங்காய் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் SAIC மோட்டார் கார்ப்-க்கு சொந்தமான பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான MG எனப்படும் மோரிஸ் கேராஜ்-ன் இந்திய வர்த்தகத்தில் பெரும் பகுதியை வாங்குவது தான்.
இந்த பேச்சுவார்த்தை குறித்தும், பல்வேறு முன்னேற்றங்கள் நடந்து வருவதாக பல செய்திகள் வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சஜ்ஜன் ஜிண்டால். இந்திய ஆட்டோமொபைல் துறைக்குள் நுழைய பல முறை சஜ்ஜன் ஜிண்டால் முயற்சி செய்த நிலையில் மோரிஸ் கேராஜ் இந்திய வர்த்தகத்தை கைப்பற்றுவது குறித்து வெளியான தகவலை அனைத்து தரப்பினரும் நம்பினர்.

இன்று JSW குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், JSW ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட JSW குரூப் நிறுவனங்கள் என எந்த தரப்பும் MG மோட்டார் இந்திய வர்த்தகத்தை கைப்பற்றுவது குறித்த திட்டத்தை நிர்வாகத்திடம் வைக்கவில்லை. இதுகுறித்து எவ்விதமான ஆலோசனையும் நடக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது.
இதன் மூலம் MG மோட்டார் இந்திய நிறுவனம் தொடர்ந்து சீன நிறுவனமாகவே இந்தியாவில் செயல்பட உள்ளது. கடந்த வாரம் வெளியான தகவல் படி இரு தரப்புக்கு மத்தியில் ஒப்பந்தம் கையெழுத்தானால் MG மோட்டார் இந்தியா நிறுவனத்தில் SAIC மோட்டார் கார்ப் 51 சதவீத பங்குகளையும், 32-35% சதவீத பங்குகளை சஜ்ஜன் ஜிண்டால்-ம் பெற உள்ளதாகவும். மேலும் இந்திய நிதி நிறுவனங்களிடம் 8 சதவீத பங்குகளும், எம்ஜி இந்தியாவின் டீலர்கள் மற்றும் ஊழியர்களிடம் 6-7 சதவீத பங்குகளும் இருக்கும் என கூறப்பட்டது.

சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW குழுமம், MG மோட்டார்ஸ் உடன் இணைந்து புதிதாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க உள்ளதாகவும், இதற்காக இக்கூட்டணி சென்னையில் இருக்கும் போர்டு தொழிற்சாலையை வாங்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது. தற்போதைய விளக்க அறிக்கை மூலம் இதுவும் நடக்காது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications