டெல்லி: 2024- 25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக கூடும் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் டெலாய்ட் (Deloitte)நிறுவனம் சம்பளதாரர்களின் எதிர்ப்பார்ப்புகளையும், சில கணிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது.
வருமானவரி அடுக்குகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், வீட்டு வாடகை அலொவென்ஸை உயர்த்த வேண்டும் என்பன அறிவிப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என டெலாய்ட் நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவில் தற்போது புதிய வரிமுறை மற்றும் பழைய வரிமுறை என இரண்டு வரி நடைமுறைகள் அமலில் இருக்கின்றன. பழைய வரிமுறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாம் வருமான வரிச் சலுகைகளை பெற முடியும். ஆனால் புதிய வரிமுறையில் அத்தகைய வருமானவரிச் சலுகை பிரிவுகள் கிடையாது.
இந்நிலையில் மக்கள் புதிய வரி நடைமுறைக்கு மாற வேண்டும் என்பதற்காக அரசு புதிய வரி நடைமுறையில் வருமான வரி உச்ச வரம்பினை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக டெலாய்ட் நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தற்போதுள்ள வீட்டு வாடகை அலொவென்ஸை அதிகரிக்க வேண்டும் என சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ஏனெனில் தற்போது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீட்டு வாடகை என்பது 30 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
எனவே தற்போது ஹெச்ஆர்ஏ என்பது ஒருவரது ஊதியத்தில் 20 முதல் 30 சதவீதமாக வழங்கப்படும் நிலையில், அதனை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் குறிப்பாக நகரப் பகுதிகளில் இந்த சலுகையை வழங்க வேண்டும் என ஊதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாகவும் கார்பன் வெளியீட்டை குறைப்பதற்காகவும் மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80EEBஇன் கீழ் மின்சார வாகன கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி தொகைக்கு ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம் என அறிவித்திருந்தது.
ஆனால் அது மார்ச் 2023 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துவிட்டது. இந்த சலுகையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்றும் இந்த வரம்பினை 2 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என்றும் சம்பளதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைவருக்கும் சொந்த வீடு என்ற ஒரு இலக்கை நிர்ணயம் செய்து அரசு திட்டங்களை வகுத்து வரும் நிலையில் அரசு இதற்கு முன்பு நடைமுறைப்படுத்திய அதாவது வீட்டுக் கடன்களுக்காக செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு வழங்கிய 80EEA பிரிவு மார்ச் 2022ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது . இதனை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை சம்பளதாரர்கள் முன்வைக்கின்றனர்.
story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications