சேலம் மாவட்டத்தின் மிக முக்கியமான தொழிற்சாலையும், அடையாளமுமாக விளங்கும் சேலம் ஸ்டீல் பிளான்ட் தனியார்மயமாக்கல் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு உள்ளது. கொங்கு மண்டலத்தில் மிகவும் முக்கிய வர்த்தகப் பகுதியாகவும், வருவாய் ஈட்டும் பகுதியாகவும் இருக்கும் சேலம் மாவட்டத்தில் பல மத்திய அரசு நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இதில் முக்கியமான ஒன்று ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்-ன் கிளையான சேலம் ஸ்டீல் பிளான்ட்-ஐ மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யத் திட்டமிட்ட நிலையில், இதை வாங்குவோர் மத்தியில் விருப்பம் இல்லாத காரணத்தால் தனியார்மயமாக்கல் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு உள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சேலம் ஸ்டீல் பிளான்ட் வாங்குவதற்குப் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏலத்தில் பங்குபெற விருப்ப விண்ணப்பம் பெறப்பட்டு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பத்தைத் தேர்வும் செய்துள்ளது.
ஆனால் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்டத்திற்குச் செல்ல விருப்பம் காட்டாத நிலையில் தற்போது தனியார்மயமாக்கல் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு அரசு சொத்துக்களின் பயன்பாட்டை அதிகரித்த சில சொத்துக்களைத் தனியார்மயமாக்கல் பணிகளை மேற்கொண்டது, இதில் சேலம் ஸ்டீல் பிளான்ட்-ஐ விற்பனை செய்ய CCEA அமைப்பு ஒப்புதல் அளித்தது.
சேலம் ஸ்டீல் பிளான்ட் பல வகையாக ஸ்டீல் பொருட்களைத் தயாரித்து வருகிறது. ஒரு வருடத்திற்கு 70000 டன் கோல்டு ரோலிங் மில் மற்றும் 3,64,000 ஹாட் ரோலிங் மில் உற்பத்தித் திறன் கொண்டு உள்ளது. மேலும் வருடத்திற்கு 1,80,000 டன் ஸ்டீல் ஸ்லாப் தயாரிக்கும் தளமும் கொண்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications