டிரம்ப் வரி விதிப்பு.. சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வரும் நிறுவனங்கள்.. ஜாக்பாட் தான்..!

இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதிக்கப்படும் என அறிவித்திருப்பதால் சாம்சங் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் சீனாவில் இருந்து தங்களுடைய உற்பத்தியை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் சாம்சங் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியை சீனாவிலிருந்து வேறு நாட்டிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளனவாம். அந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவே இருப்பதாக தெரிவித்துள்ளது. மார்ச் 4ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் வரி விதிப்பு.. சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வரும் நிறுவனங்கள்.. ஜாக்பாட் தான்..!

இந்த வரி உயர்வு மின்னணு சாதன பொருட்கள் பொருட்களான ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப்கள் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றின் விலையை மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளன.

ஏற்கனவே 2020 ஆம் ஆண்டிலிருந்து சீனாவில் செயல்பட்டு வரும் தங்களுடைய ஆலைகளை சாம்சங் படிப்படியாக மூடி வருகிறது. தற்போது சீன பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டிருப்பதால் சாம்சங் நிறுவனம் தன்னுடைய கவனத்தை இந்தியா மீது திருப்ப இருப்பதாகவும் இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் ஹை என்ட் மாடல் போன்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல அமெரிக்க சந்தையில் கணிசமான பங்கினை வைத்திருக்கக்கூடிய உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இடம் மாற்றுவதற்கு திட்டமிட்டு இருக்கின்றன என சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றை பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு இந்த நிறுவனங்கள் முன் வந்திருப்பதாக தெரிவிக்கிறது.

குறிப்பாக சாம்சங் நிறுவனத்தை பொருத்தவரை அதன் ஒரிஜினல் டிசைன் மேனுஃபேக்சரஸ் பெரும்பாலும் சீனாவில் தான் இருக்கின்றன. இவை தான் ஸ்மார்ட் போன்களின் அடிப்படை. எனவே ஸ்மார்ட் போன் உற்பத்திக்கு சாம்சங் நிறுவனம் சீனாவையே பெருமளவு சார்ந்து இருக்கிறது. இந்நிலையில் அதையே இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்திற்கு போனின் அடிப்படை வடிவமைப்பை உருவாக்கி வரும் மூன்று நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் தங்களின் ஆலைகளை நிறுவியுள்ளன என்பதால் இனிவரும் நாட்களில் சாம்சங் போன்களின் அடிப்படை வடிவமைப்புகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+