கொரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் எல்லாமே போராடிக் கொண்டு இருக்கிறது. ஏகப்பட்ட உயிர் இழப்புகள், மேற்கொண்டு புதிதாக கொரோனா தொற்றுவது என செய்திகள் நம்மை கலக்கம் அடையச் செய்கின்றன.
இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின் பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களின் உதவிக் கரத்தை நீட்டி இருக்கின்றன.
டாடா, ரிலையன்ஸ், விப்ரோ, மஹிந்திரா என இந்தியாவின் டாப் கம்பெனிகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.
சாம்சங்
இந்த வரிசையில் தற்போது, தென் கொரியா நாட்டைச் சேர்ந்த, ஸ்மார்ட்ஃபோன்களைத் தயாரிக்கும் சாம்செங் நிறுவனமும் இணைந்து இருக்கிறது. சமீபத்தில் தான் சாம்செங் நிறுவனம் சுமாராக 15 கோடி ரூபாயை பிரதமரின் கேர்ஸ் (PM CARES) திட்டத்துக்கு நன்கொடையாகக் கொடுத்தது.
20 கோடி
இப்போது மேலும் 20 கோடி ரூபாயை, இந்தியாவின் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு கொடுத்து உதவ ஒதுக்கீடு செய்து இருக்கிறார்களாம். அதை அவர்களின் செய்திக் குறிப்பிலேயே சொல்லி இருக்கிறார்கள். இதை எல்லாம் விட மிக முக்கியமான ஒரு விஷயத்தை, பிரத்யேகமாக தமிழகத்துக்குச் செய்து இருக்கிறது சாம்சங்.
தமிழகம்
சாம்செங் நிறுவனத்துக்கு இந்தியாவில், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு உற்பத்தி ஆலை இருக்கிறது. தமிழகத்துக்கு என்று தனியாக 2 கோடி ரூபாயை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு (Tamil Nadu State Disaster Management Authority) நன்கொடையாக வழங்கி இருக்கிறது.
உதவிப் பொருட்கள்
இது போக, சாம்சங் நிறுவனம், கணிசமான அளவில் மளிகை பொருட்களையும் அரசு அதிகாரிகளிடம் வழங்கி இருக்கிறதாம். இந்த மளிகை பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து காஞ்சிபுரம், கடலூர் போன்ற மாவட்டங்களுக்கு வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கச் சொல்லி இருக்கிறார்களாம்.
சாம்சங் தரப்பு
தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு தொடர்ந்து உதவுகிறோம், அதோடு, சாம்சங் நிறுவனம் மேற்கொண்டு எப்படி இந்த இக்கட்டான நேரத்தில் பங்களிப்பது என, லோக்கல் அதிகாரிகளோடும் கலந்து பேசிக் கொண்டு இருக்கிறது என சாம்சங் இந்தியா நிறுவனத்தின் கார்ப்பரேட் துணைத் தலைவர் பீட்டர் ரீ சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications