சாம்சங் போடும் மெகா திட்டம்.. சீனா-வுக்கு மொத்தமாக கைகழுவியாச்சு..!

இந்தியா உலகிற்கான எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பு தளமாக மாறியுள்ளது, முதலில் ஸ்மார்ட்போன் அசம்பிள் மட்டுமே இந்தியாவில் துவங்கிய நிலையில் தற்போது மொத்த போனையும் இந்தியாவில் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக லேப்டாப் தயாரிப்பில் இந்தியா முன்னோடியாக உயர துவங்கியுள்ளது.

தென்கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங், சீனாவில் தனது உற்பத்தி தளத்தை தொடர்ந்து குறைத்து வரும் வேளையில் இந்தியாவில் நொய்டா தொழிற்சாலையில் இந்த ஆண்டு லேப்டாப்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாம்சங் போடும் மெகா திட்டம்.. சீனா-வுக்கு மொத்தமாக கைகழுவியாச்சு..!

இந்தியாவை அதன் முக்கியமான உற்பத்தித் தளமாக சாம்சங் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவரும், மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் (எம்எக்ஸ்) பிசினஸ் தலைவருமான டிஎம் ரோ நிருபர்களிடம் பேசுகையில், லேப்டாப் தயாரிப்புக்கான வேலைகள் இந்தியாவில் நடந்து வருகிறது.

நொய்டா தொழிற்சாலையில் இந்த ஆண்டு லேப்டாப் உற்பத்தியை தொடங்குவோம். அதற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன என்று அவர் கூறினார். நிறுவனத்திற்கும் இந்தியா ஒரு முக்கியமான உற்பத்தித் தளம் என்றும், அதற்கு மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து பல்வேறு மட்டங்களில் ஆதரவு கிடைத்துள்ளது என்றும் ரோஹ் கூறினார்.

இந்தியாவில் உற்பத்தியை வலுப்படுத்த அரசுடன் நிறுவனம் தொடர்ந்து ஒத்துழைக்கும். உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலையான எங்கள் நொய்டா தொழிற்சாலை, சாம்சங்கின் இந்தியா மீதான வலுவான அர்ப்பணிப்பின் அடையாளமாகவும், அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் வெற்றிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

சாம்சங் இந்தியாவின் நீண்ட கால பங்குதாரர். நாங்கள் 'மேக் இன் இந்தியா', 'மேக் ஃபார் இந்தியா' இப்போது, 'மேக் ஃபார் தி வேர்ல்டு' என்ற கொள்கையில் உற்பத்தி பணிகளை துவங்கியுள்ளோம்.

நிறுவனம் சமீபத்தில் தனது கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு திறனில் முக்கிய கவனம் செலுத்துகிறது. சாம்சங் நிறுவனம் தனது நொய்டா தொழிற்சாலையில் கேலக்ஸி எஸ்24 ஐ தயாரிக்கும் என அறிவித்துள்ளது.

ஜூலை 2018 இல், நொய்டாவில் உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலையை சாம்சங் அமைத்தது. இந்த புதிய வசதியின் மூலம், சாம்சங் நொய்டாவில் மொபைல் போன்களுக்கான தற்போதைய திறனை ஆண்டுக்கு 68 மில்லியன் யூனிட்களில் இருந்து ஆண்டுக்கு 120 மில்லியன் யூனிட்களாக இரட்டிப்பாக்கும்.

இது 2007 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வருகிறது. இது இந்தியாவில் உண்மையிலேயே தயாரிக்கப்பட்ட ஒரே பிராண்ட் ஆகும்.

நொய்டா சாம்சங்கின் மிக முக்கியமான உற்பத்தி தளமாகும். இது சாம்சங்கின் இரண்டாவது பெரிய தளமாகும். உலகளாவிய தேவைக்கு ஏற்ப அதை மேம்படுத்த ஆலையில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் மாறாமல் இருப்பது என்னவென்றால், இது எங்களுக்கு ஒரு முக்கியமான தளமாகும்" என்று ரோஹ் கூறினார்.

நொய்டா ஆலை ஃபீச்சர் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது, இப்போது நிறுவனம் இந்த ஆண்டு லேப்டாப்களை உற்பத்தி செய்யத் தொடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+