ஆபீஸ், வீடு, வாகனம் எல்லாமே சோலார்.. அசத்தும் ஊழியர்.. மாதம் ரூ.18,000 மிச்சம்.. எப்படி?

சோலார் சிஸ்டம். இது பற்றி நம்மில் பலரும் கேள்விபட்டிருப்போம். ஏன் சிலர் பயன்படுத்திக் கொண்டும் இருக்கலாம். எனினும் அடிப்படியை மட்டும் சற்று தெரிந்து கொள்வோமே.

சோலார் சிஸ்டம் என்பது மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தும் முழுமையாக கூறுகளின் ஒரு தொகுப்பாகும். இது சூரிய ஓளியை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு அமைப்பாகும்.

இது இன்று பெரிய பெரிய வீடுகளின் கூரைகளில் பார்க்க முடிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சமூக வலைதளத்தில் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

ஆனந்த் மஹிந்திரா டிவீட்

ஆனந்த் மஹிந்திரா டிவீட்

அதில் தென் கொரியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையினை, கீரின் பெல்ட் & ரோடு இன்ஸ்டிடியூட் தலைவர் எரிக் சொல்ஹெயின, வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை தான் ஆனந்த் மகேந்திரா ரீ ட்வீட் செய்திருந்தார். அதில் நெடுஞ்சாலையில் சோலார் பேனல்களுக்கு அடியில் ஒரு சைக்கிள் பாதை உள்ளது. இடு சைக்கிள் ஓட்டுபவர்கள் சூரிய ஓளியில் இருந்து பாதுகாக்கபடுகின்றார்கள், போக்குவரத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறார்கள், மேலும் இதன் மூலம் நாடு சுத்தமான எரிபொருள் ஆற்றலை பெறும் என்றும் ட்வீட் செய்திருந்தார்.

தேவையான இடங்களில் எல்லாம் சோலார்

தேவையான இடங்களில் எல்லாம் சோலார்

ஆனால் அது என்ன பிரம்மாதம்? எங்களை பாருங்கள் என திரும்ப வைத்திருக்கிறார் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர். சோலார் எனர்ஜினையினை பயன்படுத்தி வரும் இவர். 47 வயதான சஞ்சய் தேஷ்பாண்டே. தனது வீடு, அலுவலகம்,வாகனம் என தனக்கு தேவையான அனைத்து இடங்களிலும் சோலாரை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

மாதம் ரூ.18,000 மிச்சம்

மாதம் ரூ.18,000 மிச்சம்

இவர் தனது மின்சார காரினையே பயணங்களுக்கு பயன்படுத்துகிறார்,. தனது வீட்டில் கார்டனுக்கு தண்ணீர் செலுத்த கூட சோலார் பம்புகளையே பயன்படுத்தி வருகின்றார். இதன் மூலம் மாதம் 18,000 ரூபாய் சேமிக்க முடிவதாக கூறுகிறார். அதோடு தான் விற்பனை செய்யும் மின்சாரத்தினை விற்பனை செய்வதன் மூலம் 1,000 ரூபாய் சம்பாதிப்பதாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்து மூலம் அறிய முடிகிறது.

அப்பாவின் நண்பர் கூறிய ஐடியா

அப்பாவின் நண்பர் கூறிய ஐடியா

சஞ்சய் இந்த பிரம்மாண்ட ஐடியாவினை தனது தந்தையின் நண்பர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டில் மேல்புறம் சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் வீட்டினையும் பாதுகாக்க முடியும். இதன் மூலம் மின்சாரத்தினையும் உற்பத்தி செய்ய முடியும். இதனால் எந்த இடைஞ்சலும் இருக்காது என சஞ்சய் கூறுகின்றார்.

மின்சார கட்டணம் எவ்வளவு வரும் தெரியுமா?

மின்சார கட்டணம் எவ்வளவு வரும் தெரியுமா?

முன்னதாக சஞ்சய்க்கு மாதம் 4,000 மின்சார கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கடந்த ஆண்டில் வீட்டின் கூரையின் மீது சோலார் பேனல்களை நிறுவினேன். சராசரியாக 4.2 கிலோவாட் சோலார் எனர்ஜியை அமைக்க எனக்கு அனுமதி கிடைத்தது. இது எனது பயன்பாட்டிற்கு பிறகு ஹுப்பள்ளி மின்சாரம் வழங்கும் நிறுவனத்திற்கும் வழங்கப்படுகின்றது. எனது மின் கட்டணம் கழித்து மாதம் 500 - 1000 ரூபாய் வரையில் திரும்ப பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்கள்

மின்சார வாகனங்கள்

என்னிடம் இரண்டு மின்சார வாகனங்கள், வீட்டிற்கு தேவையான இயந்திரங்கள், மாடித் தோட்டத்திற்கு தண்ணீர் செலுத்த தேவையான பம்புகள் என பலவற்றையும் செய்கிறோம்.

அவர் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளில் கூட சிறிய பேனல்களை வைத்துள்ளார். அவை வீட்டில் சிறிய அளவில் வெளிச்சத்தினை ஓளிர செய்ய பயன்படுத்தப்படுகிறது. பல விளக்குகள் மாலைக்கு பிறகு சென்சார்கள் மூலம் தானாக ஒளிர ஆரம்பிக்கின்றன.

பணம் மிச்சம்

பணம் மிச்சம்

இதன் மூலம் பணத்தையும் மிச்சப்படுத்த முடிகிறது. அதோடு சுற்றுசூழலுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

மூன்று வகையான சோலார் பேனல்களை நிறுவியுள்ளேன். அதில் மழை காலத்தின் போது அதிக திறன் கொண்ட மின் உற்பத்தி செய்யும் மோசோகிரிஸ்டலின் பேனல்களும் அடங்கும் என கூறுகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+