IT நிறுவனங்களில் பணி நீக்கங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுவும் முன்னணி நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக தங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகின்றன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 3 சதவீதமாகும். இந்தப் பணி நீக்கம் குறித்து பரவலாகப் பேசப்பட்ட நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்திய நாதெல்லா நிறுவனம் ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது? என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நிறுவனத்தில் பேசிய சத்ய நாதெல்லா பணி நீக்கங்கள் ஊழியர்களின் செயல்திறனை பற்றியது மட்டும் கிடையாது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தான் இந்த பணி நீக்கங்கள் நடந்தது என்று கூறினார். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

தனது செயல்பாடுகள் அனைத்தையும் AI மூலம் கையாளும் வகையில் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டு AI தொழில்நுட்பத்தில் 80 பில்லியன் டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் AI திறன்களை விரிவுபடுத்தி பல்வேறு தளங்கள் மற்றும் சேவைகளுக்கு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் உதவியாளர்களை வெளியிடவுள்ளது.
இந்த மாற்றத்தில் சில ரோல்கள் குறிப்பாக ப்ராடக்ட் டெவலப்மெண்ட் மற்றும் இன்ஜினியரிங் போன்ற ரோல்களில் அதிக அளவிலான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஐ தொழில்நுட்பத்தை மாற்றி அமைப்பதற்காக இந்த பணி நீக்கங்கள் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ப்ராடக்ட் அதிகாரியான அபர்ணா, அதே நிகழ்வின்போது சில கருத்துக்களைக் கூறினார். அதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பது மட்டும் போதாது. ஏற்கனவே கோடிங் இறந்துவிட்டது என்ற கருத்துக்களை முன்னிறுத்தி கூறினார். இதிலிருந்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் பல விஷயங்கள் எளிதாக செய்ய முடிகிறது என்பதை அவர் மறைமுகமாகக் கூறியதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே AI தொழில்நுட்பம் பாதி வேலை வாய்ப்புகளை குறைக்கத் தொடங்கியுள்ளது. நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளை பணியமர்த்தும் விகிதம் 50 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஆனால் இனி வரும் ஆண்டுகளில் புதுப்புது வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொண்டால் தங்களுக்கு என ஒரு வேலை வாய்ப்பை பெறுவது அவ்வளவு சிரமமாக இருக்காது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications